சிறை தண்டனை எதிரொலி.. அமைச்சராக மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியையும் பறி கொடுத்தார் பாலகிருஷ்ண ரெட்டி
Recommended Video

சென்னை: தமிழக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு அந்த தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவரது எம்எல்ஏ பதவியும் உடனடியாக பறிபோனது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற கலவர வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று, எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை, சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், 3 ஆண்டு சிறை மற்றும் ரூ.10500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, நீதிபதி சாந்தி முன்னிலையில், உடனடியாக, பாலகிருஷ்ண ரெட்டி வழக்கறிஞர் ஆஜராகி, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும், எனவே தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதிபதி அனுமதியளித்து, தண்டனையை நிறுத்தி வைத்தார்.

எம்எல்ஏ பதவி
தண்டனைதான் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர, பாலகிருஷ்ண ரெட்டியை குற்றவாளி என அறிவித்த கோர்ட் உத்தரவில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, 2 வருடங்களுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அந்த மக்கள் பிரதிநிதியின் பதவி உடனே, பறிபோய்விடும். அதன்படி உடனடியாக பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறி போகிறது. எனவே இயல்பாக அவர் அமைச்சராகவும் தொடர முடியாது. இதை மூத்த வழக்கறிஞர் வில்சனும் உறுதிப்படுத்தியுள்ளார்.

6 வருடங்கள்
பாலகிருஷ்ண ரெட்டி, மேல்முறையீடு செய்து அதில் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படாவிட்டாலே தவிர, பாலகிருஷ்ண ரெட்டியால் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்படும்.

மேல்முறையீடு
மேல்முறையீட்டின்போது, கீழ்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உடனடியாக ரத்து செய்துவிட்டு விசாரணை நடத்தினால் மட்டுமே அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும். அப்படி இல்லாவிட்டால் 6 வருடங்கள் போட்டியிட முடியாது.

21 தொகுதிகள்
பாலகிருஷ்ண ரெட்டி எம்எல்ஏ பதவி பறிபோயுள்ளதால், தமிழக சட்டசபையில் காலியாக உள்ள எம்எல்ஏக்கள் இடம் 21 ஆக உயர்ந்துவிட்டது. எனவே ஏப்ரல் மாதத்தில் 21 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது தமிழகம். பாலகிருஷ்ண ரெட்டி, ஒசூர் தொகுதியில் எம்எல்ஏவாக பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications