தொடரும் கனமழை.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video
அந்தமான் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாறாக அதிகாலையிலேயே 4 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது.
சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த போது சென்னையிலும் வடமாவட்டங்களில் மிக கனமழை பெய்தது.

ஆனால் அதன்பின் வடமாவட்டங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறைந்தது. வட தமிழக கடலோரப் பகுதியில் இது தாழ்வு பகுதியாக வலிமை இழந்து நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்.
இன்று இரவு சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். இன்று இரவும், நாளையும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதேபோல் சென்னையிலும் இன்று இரவு லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஈரோடு சேலம் தர்மபுரி வேலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.20) விடுமுறை விடப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.20) விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இன்று காலையில் இருந்து கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இங்கு நாளையும் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications