அதி தீவிர கனமழை.. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக கனமழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை தீவிரம் அடைந்த வடகிழக்கு பருவமழை தற்போது உச்சம் தொட்டுள்ளது.
தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது வடமேற்கு பகுதியாக திரும்பி தமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை பெற்று வருகிறது.

தீவிர மழை
நேற்று மாலையில் இருந்து இரவு முழுக்க தமிழ்நாடு முழுக்க பரவலாக மழை பெய்தது. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சென்னையில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் இரவு முழுக்க பெய்த மழை காரணமாக சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி
இந்த தொடர் மழையை தொடர்ந்து தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி, இராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், மதுரை, அரியலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், சிவகங்கை, சென்னை, காஞ்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

விடுமுறை
மேலும், சேலம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தேனி நாகை, மயிலாடுதுறை, ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்றும், நாளையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Recommended Video

நாளையும் விடுமுறை
தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மழையை பொறுத்து மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications