ஒடிசா பறக்கும் அமைச்சர் சிவசங்கர்.. ரயில் விபத்து குறித்து சொன்ன முக்கிய அப்டேட்
சென்னை : ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒன் இந்தியாவிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், இன்று காலை முதல் விமானத்தில் நாங்கள் ஒடிசா செல்ல உள்ளோம். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அங்கிருந்து காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வோம் என்றர்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே சென்னை கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் 350க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் சிக்கியோரை மீட்கும் பணியில் 800 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு தகவல் தெரிவித்துள்ளது.இந்த கோரவிபத்து காரணமாக கிழக்கு கடற்கரை ரயில்வே வழித்தடத்தில் வரும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம், பலத்த காயம் அடைந்தோருக்கு ₹2 லட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ₹50,000 நிவாரணத்தை ரயில்வே அறிவித்துள்ளது
ரயில் விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்; விமானப்படையும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோருக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஒடிசா ரயில் விபத்து குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒன் இந்தியாவிற்கு தொலைப்பேசி வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஒடிசா விபத்து குறித்து கேள்விப்பட்ட உடன், உடனடியாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தொடர்பு கொண்டு பேசினார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய கோரி உள்ளார்.
அதேபோல் முதல்வர் அலுவலகமும் முழுமையாக இயங்கி வருகிறது. ஒடிசாவில் இருக்கின்றன ஐஏஏஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அங்கே பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ரயில்வே துறையுடன் தேவையான உதவிகளை பெற தொடர்பில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் சார்பாக ஒரு குழுவை அமைக்க திட்டமிட்டு, அந்த குழுவில் போக்குவரத்து துறை அமைச்சராகிய என்னையும், அதேபோல் வருவாய் துறை செயலர் அர்ச்சனா உள்பட 3 ஐஏஏஸ் அதிகாரிகள் குழுவை அனுப்ப பணிந்திருக்கிறார்கள்.
நாளை காலை முதல் விமானத்தில் நாங்கள் ஒடிசா செல்ல உள்ளோம். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் பிரதிநிதிகளாக அங்கிருந்து காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதற்கும், அங்கிருந்து தமிழ்நாடு வருவதற்கான உதவிகளை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான பணிகளை செய்வதற்கு தமிழ்நாட்டினுடைய முதல்வர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள்" இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிரவித்தார்
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications