இபி பில் குறைய போகுது.. தமிழ்நாடு இபியில் நடக்கும் அதிரடி மாற்றம்! மின் கட்டண முறை சீக்கிரமே மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கு (UG) வசூலிக்கப்படும் அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நுகர்வோர் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இப்படி புகார்கள்; எழுந்ததையடுத்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) உடனடியாக அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் கணக்கில் அதைத் திருப்பிச் செலுத்தி அவர்களின் அடுத்தடுத்த பில்களுடன் சரிசெய்துகொள்ளவும் என்று உத்தரவிட்டுள்ளது மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் மின்கட்டணம் குறைவாகவும், நிலத்தடி கேபிள்களுக்கு (UG) அதிக மேம்பாட்டு கட்டணமும் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

Tangedco EB board will implement new billing system in soon all over Tamil Nadu

இதற்காக பயன்படுத்தப்படும் மென்பொருளானது உடனடியாக திருத்தப்பட வேண்டும், மேலும் தற்போதுள்ள ஏற்பாடுகளுடன் மேம்பாட்டுக் கட்டணங்களை மேலும் வசூலிக்க அனுமதிக்கப்படாது. இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள கூடுதல் மேம்பாட்டுக் கட்டணங்கள் விண்ணப்பதாரர்கள் அல்லது நுகர்வோருக்கு உடனடியாகத் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது முன்கூட்டியே நுகர்வுக் கட்டணமாகக் கருதி ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என்று ஆணையம் கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இனிமேல் மேல்நிலை கேபிள்கள் (OH) உள்ள இடங்களில் நிலத்தடி கேபிள்களுக்கான (UG) அதிக மேம்பாட்டு கட்டணம் வசூலிக்கப்பட கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இபி பில்: இது போக சென்னை மட்டுமின்றி அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்கட்டண முறையில் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் மின் கட்டண முறையில் முக்கியமான சில மாற்றங்களை வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கலாம் என்று மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகையை வரும் நாட்களில் தமிழ்நாடு முழுக்க செயல்படுத்த உள்ளனர். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த நவம்பர் மாதம் சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான மின்சாரம் வழங்குவதற்கு I-E எனப்படும் புதிய கட்டண வகையை உருவாக்கி, நவம்பர் 1 முதல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆனால் இது முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது என்ன புதிய முறை: அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 1-டி பிரிவின் கீழ் தற்போது ஒரு யூனிட்டுக்கு ரூ.8.15 விதிக்கப்படுகிறது. இது முதலில் 8 ரூபாயாக இருந்தது. அது பின்னர் 8.15 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இது மக்கள் இடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இதற்காக 1 - இ என்ற பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. அதன்படி மூன்று தளங்கள் அல்லது அதற்கும் குறைவான அடுக்குமாடி குடியிருப்புகள், 10 குடியிருப்புகள் அல்லது அதற்கும் குறைவான குடியிருப்புகள் மற்றும் சான்ஸ் லிஃப்ட்கள் ஐ-இ பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50 வசூலிக்கப்படும். இருப்பினும், TNERC உத்தரவின்படி, I-D மற்றும் I-E வகைகளுக்கு நிலையான கட்டணங்கள் ஒரு kW க்கு ரூ.102 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இன்னும் செயலுக்கு வரவில்லை: TNERC உத்தரவில், டான்ஜெட்கோ முன்மொழிந்தபடி, மாநிலம் முழுவதும் உள்ள சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளின் நலனுக்காக, பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கட்டணக் குறைப்பால் டான்ஜெட்கோவிற்கு வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட, மாநில அரசு கூடுதல் தற்காலிக மானியத்தை முன்கூட்டியே விடுவிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் நவம்பர், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆனால் இன்னும் பல குடியிருப்புகளுக்கு இந்த புதிய கட்டண விகிதம் மாற்றப்படவில்லை. இதனால் பல அதிக கட்டணம் செலுத்தும் நிலை இல்லை.

இதனால் மாதம் மாதம் 300 - 500 ரூபாய் வரை பலரும் கூடுதல் கட்டணம் செலுத்துகின்றனர். சமீபத்தில் மாநில அரசு அறிவித்த குறைக்கப்பட்ட கட்டணங்களுக்குத் தகுதியான அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொதுவான விநியோக இணைப்புகளை அடையாளம் காண, டான்ஜெட்கோ பணியாளர்கள் வீடு வீடாக ஆய்வு நடத்தினார்கள். வீடு வீடாக இதற்காக சர்வே எடுக்கப்பட்டது.

வெள்ளம் அமல்: ஆனால் அதன்பின் பல இடங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படவில்லை. வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் காரணமாக கணக்கெடுப்பில் தொய்வு ஏற்பட்டது.

மீண்டும் நடக்கும்: இந்த மாதம் மீண்டும் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது விநியோக இணைப்புகளுக்கு உருவாக்கப்பட்ட I-E எனப்படும் புதிய கட்டண வகை விரைவில் முழுமையாக செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+