சூப்பர் சர்ப்ரைஸ்.. அடிக்கடி கரண்ட் போகுதா.. தமிழக அரசு சொன்ன நம்பிக்கையை பாருங்க.. ஹப்பாடா நிம்மதி
சென்னை: தடையில்லா மின்சாரம் தமிழகமெங்கும் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களும் வெளியாகி உள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை, மின்தேவை என்பது, தினமும் காலை மாலையில் சராசரியாக 15000 மெகா வாட்டாகவும், மற்ற நேரங்களில் 14000 மெகா வாட்டாகவும் உள்ளது. ஆனால், இவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைப்பதில்லை.. அதனாலேயே மத்திய மின் நிலையங்கள், தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கரண்ட் பிரச்சனை: கடந்த கோடையில் மின்தேவை அதிகமாக இருந்தது.. 19387 மெகா வாட்டாக மின்தேவை அதிகரித்த நிலையில், தமிழக அரசு மிரண்டுவிட்டது. எனினும், கரண்ட் பிரச்சனை அவ்வளவாக ஏற்படாதவாறு, பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்தது.
வரும் ஜனவரியில், மின் தேவையை பூர்த்தி செய்வதில் 2350 மெகா வாட் அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்படும் என்று மத்திய அரசு வார்னிங் தரவும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (Tangedco) கூடுதல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியது.. அதனால்தான், தற்போது மின்தேவையை ஓரளவு சமாளித்து வந்ததுடன், மின்தேவையும் தமிழகத்தில் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
பருவமழை: பருவமழையும், பண்டிகை கால விடுமுறையும் சேர்ந்து இந்த மின்தேவையை குறைத்திருக்கிறதாம். நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையானது, சராசரியாக 14,000 மெகாவாட் ஆக இருந்த நிலையில், தற்போது 10,000 மெகாவாட்டாக குறைந்துள்ளதாம்.. வழக்கமாக, சராசரி மின் பயன்பாடு 320 மில்லியன் யூனிட்டாக இருக்குமாம். ஆனால், இந்த முறை தீபாவளிக்கு 212.27 மில்லியன் யூனிட் மட்டுமே செலவாகி உள்ளதாம்.
எனவே, வரும் ஜனவரி மாதம் மட்டுமல்ல, அடுத்த சில மாதங்களில் தொடங்கவிருக்கும் கோடை காலத்திலும்கூட, தடையற்ற மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசுக்கு எந்தவித சிக்கலும் வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னரசு: அதற்கேற்றவாறு, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒரு நம்பிக்கை வார்த்தை தந்திருக்கிறார்.. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இந்நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல, பிறகு, மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் (SLDC) மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம்(SCADA) தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு மேற்கொண்டார்.
நம்பிக்கை: மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாகச் சரி செய்யப்படுவதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்திற்கு 10 லட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது அவர் சொல்லும்போது, "வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.. பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசும்போது, "வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின்மாற்றிகளை உடனடியாக சீரமைக்க ரூ.4.4 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications