தமிழகத்தை உலுக்கிய கொடூரம்.. தரமணி கல்லூரி வளாகத்தில் மயான அமைதி! நேரில் விசிட் செய்த ஒன் இந்தியா!
சென்னை: சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வடமாநில இளைஞரும் அவரது குடும்பத்தினரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கொடூரம் நிகழ்ந்த வளாகத்தில் ஒன்இந்தியா தமிழ் தற்போதைய சூழலை வெளிச்சம் போட்டி காட்டி இருக்கிறது. கல்லூரி அமைந்திருக்கிறது என்ற சுவடே தெரியாமல் மயான அமைதி நிலவுவதாக சொல்கின்றனர் மாணவர்கள்.
சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்த மூவரைக் கொன்ற கொடூர சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனமாக இருக்க வேண்டிய ஒரு வளாகத்தில், மனிதநேயத்தை உறைய வைக்கும் வகையில் நிகழ்ந்த இந்த கொலைகள், மாநில அளவில் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார், அவரது மனைவி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை ஆகிய மூவரும், தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திற்குள் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததிலிருந்து, அந்த பகுதி முழுவதும் பதற்றமும், மௌனமும் கலந்த ஒரு சூழல் நிலவி வருகிறது.
மதுபோதையில் இருந்த ஒரு கும்பல், கவுரவ் குமாரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. அந்த கொடூர செயலை தடுக்க முயன்ற கணவர் கவுரவ் குமாரும், அந்த கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதோடு மட்டும் அல்லாமல், இரண்டு வயதே ஆன அவர்களது குழந்தையையும், தரையில் அடித்து கொன்றதாக கூறப்படும் தகவல், சமூகத்தை உறைய வைத்துள்ளது. எந்த தவறும் அறியாத ஒரு குழந்தை கூட இந்த கொடூர வன்முறையிலிருந்து தப்பவில்லை என்பதே, இந்த சம்பவத்தின் பயங்கரத்தன்மையை காட்டுகிறது. கல்லூரி வளாகம் போன்ற இடத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது எப்படி? பாதுகாப்பு ஏற்பாடுகள் எங்கே? வெளிமாநில தொழிலாளர்கள் அல்லது குடும்பங்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் உருவாகிவிட்டதா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஒன் இந்தியா தமிழ் குழு, இந்த கொடூரம் நிகழ்ந்த தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்த போது, அங்கு வழக்கமான கல்வி நிறுவன சூழல் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்தது. மாணவர்கள் சிலர் கூறுகையில், "இது கல்லூரி வளாகம் என்று சொன்னால் நம்ப முடியாத நிலை. எங்கும் பாதுகாப்பு இல்லை. சம்பவம் நடந்த பிறகும் கூட அமைதி அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சுடுகாடு மாதிரி மயான அமைதி நிலவுகிறது" என்றனர்.
அந்த காட்சிகளை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்...
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications