Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டார்கெட் வேக்சினேஷன்.. கலெக்டர்களுக்கு மா.சு முக்கிய உத்தரவு.. வழிபாட்டு தலங்களுக்கு முக்கியத்துவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிரபலமான வழிபாட்டு தலங்கள், கோவில்கள் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் 100% வேக்சின் போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது தினசரி கேஸ்கள் 2100க்கும் கீழ் சென்றுள்ளது. ஒரு பக்கம் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் மக்கள் வேக்சின் போட்டுக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 1,95,00,740 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 1,60,17,171 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

அரசு திட்டம்

அரசு திட்டம்

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிரபல கோவில்கள் இருக்கும் நகரங்கள், அதிக சுற்றுலா பயணிகள் வரும் புனித தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதிக அளவு வேக்சின் போட அரசு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேக்சின் போடும் முடிவில் அரசு உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இவர்கள் அனைவருக்குக்கும் வேக்சின் போட வேண்டும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

எண்ணிக்கை

எண்ணிக்கை

கோவில் நகரங்களில், வழிபாட்டு தலங்கள் இருக்கும் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இங்கு மக்கள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக இப்போதே இங்கு வசிக்கும் மக்களுக்கு வேக்சின் போட வேண்டும். இவர்களுக்கு வேக்சின் கொடுப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

பரவல்

பரவல்

அப்போதுதான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இங்கு மக்கள் அதிகமாக கூட தொடங்கி உள்ளனர். இது இன்னொரு பரவலை ஏற்படுத்த கூடாது. இதனால் கோவில் நகரங்களில் அதிக அளவு வேக்சின் போட சொல்லி இருக்கிறேன், என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரவு

உத்தரவு

இது தொடர்பாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளது. ராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி, வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட கோவில்கள், மத வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் 100% வேக்சின் போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளது.

அடுத்த கவனம்

அடுத்த கவனம்

பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு மட்டும் இந்த உத்தரவு சென்றுள்ளது. இன்னும் 11 நாட்களுக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று உத்தரவு சென்றுள்ளது.இந்த மாத இறுதிக்குள் இங்கு 100% வேக்சினேஷனை முடித்துவிட்டு, வரும் நாட்களில் சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் மக்களுக்கு வேக்சின் போடும் முடிவில் அரசு உள்ளது.

ஊட்டி

ஊட்டி

அதாவது ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களில் வசிக்கும் மக்களுக்கு அடுத்த மாத இறுதிக்குள் 100% வேக்சின் போடப்படும் திட்டத்தில் அரசு உள்ளதாகவும், வேக்சினை டார்கெட் அடிப்படையில் செலுத்த உள்ளோம். எங்கு கேஸ்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து, அந்த பகுதிகளை மட்டும் டார்கெட் செய்து வேக்சின் செலுத்தி வருகிறோம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+