டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. தமிழக அரசு எடுத்த சூப்பர் முடிவு?
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நீண்ட நாட்களாக ஊதிய ஊயர்வு அளிக்கப்பாடமல் இருந்தது. இப்போது ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் சுமார் 27 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக 10 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஊதியம் உயர்த்தப்பட்டது.

அதன்படி, மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் 2,000 ரூபாய் உயர்த்தப்பட்டு 9,500 ரூபாய் ஆகவிம் விற்பனையாளர்களுக்கான சம்பளம் 1,900 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 7,500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. விற்பனை உதவியாளர்களுக்கு சம்பளம் 2,300 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 6,500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. ஊதிய உயர்வு ஊழியர்களுக்கு தலா 1,000த்திற்கு மேல் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகத்திடமும், துறை அமைச்சரிடமும் ஊழியர்கள் பலமுறை கோரிக்கையை வைத்தனர்.
இந்தநிலையில், வரும் 28ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதமும் நடைபெற உள்ளது. அப்போது, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அனைவருக்கும் தலா 2 ஆயிரம் ஊதிய உயர்வு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டாஸ்மாக் ஊழியர்களின் பணிக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு இல்லாமல் அனைவருக்கும் தலா 2 ஆயிரம் ஊதியத்தை உயர்த்தி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிக்கை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் தங்கமணிக்கும் அனுப்பபட்டுள்ளதாம். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளதால் வரும் கூட்டத்தொடரின் போது ஊழியர்களுக்கு சம ஊதிய உயர்வு என்ற அடிப்படையில் உயர்த்துவது குறித்து அறிவிப்பு வருமாம். செப்டம்பரில் அறிவிப்பு அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications