இந்திக்கு மாறிய வலைதளம்! வெடித்து கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது? எல்ஐசி நிறுவனம் கொடுத்த விளக்கம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இன்று இந்திக்கு (Default) மாற்றப்பட்டு இருந்தது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நடந்ததாகவும், தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டதாக எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது.
எல்.ஐ.சி எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இன்சூரன்ஸ் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான் என சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான ஒரு பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பாதுகாப்பு முதலீடாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் சிறந்த முதலீட்டு நிறுவனமாகவும் எல்.ஐ.சி உள்ளது. நாடு முழுக்க பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது.
இந்த நிலையில், LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இந்திக்கு (Default) மாற்றப்பட்டு இருந்தது. अंग्रेज़ी என்பதை அழுத்தினால் மட்டுமே LIC பக்கம் ஆங்கிலத்துக்கு மாறும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது இந்தி தெரியாத மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு வழிகளில் இந்தி திணிப்பை செய்வதாக தென் இந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன இணையதளத்தில், இந்தி டிஃபால்ட் மொழியாக மாற்றப்பட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டதாக எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எல்ஐசி நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழி தெரியும்படி மாறிவிட்டது. தற்போது ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நிகழ்ந்துவிட்டது. தற்போது இந்த கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications