நீட் தரமற்றது என்பது அம்பலம்! மத்திய அரசு இன்னும் வீண் பிடிவாதம் பிடிக்கக் கூடாது! -தமிமுன் அன்சாரி
சென்னை: நீட் என்பது தகுதி தேர்வல்ல அதுவொரு தரமற்ற தேர்வு என்பது அம்பலமாகியுள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சித்துள்ளார்.
நீட் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு இன்னும் வீண் பிடிவாதம் பிடிக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

எளிய மற்றும் கிராமப்புற மாணவ, மாணவிகளின் நலன்களுக்கும், கனவுகளுக்கும் எதிரான NEET தேர்வுக்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 20 மாணவ, மாணவிகளின் கனவுகள் கலைக்கப்பட்டு, அவர்களின் இன்னுயிர்கள் பறிபோயிருக்கின்றன.
இதனால் தமிழ்நாட்டில் பற்றிய NEET தேர்வு எதிர்ப்பு தீ என்பது கர்நாடகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் பரவி வருகிறது.
தற்போது வெளிவந்திருக்கும் ஒரு செய்தி NEET தேர்வு குறித்த மாயைகளை தகர்த்தெறிந்துள்ளது.
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்ககான 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் M.D.,M.S. படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று ஒன்றிய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்திருக்கிறது.
நாடெங்கிலும் 1325 இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது."ஏற்கெனவே பதிவு செய்துள்ள விண்ணப்பத்தாரர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை என்றும், அவர்கள் தங்கள் விருப்பங்களைத் திருத்த அனுமதி அளிக்கப்படும் என்றும், அவர்கள் மருத்துவ கலந்தாய்வுக் குழு இணையதளத்துடன் தொடர்பு கொள்ளலாம்" என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கேலித்கூத்தாக இருப்பது மட்டுமின்றி, NEET தேர்வு எந்த நோக்கத்திற்கானது என்ற போலி பிம்பங்களை உடைத்தெறியும் விஷயமாகவும் உள்ளது.
இது தகுதி தேர்வல்ல... தரமற்ற தேர்வு என்பது அம்பலமாகியுள்ளது. தற்போது முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று அறிவித்திருப்பதன் மூலம், NEET தேர்வு குறித்த பிம்பங்கள் சிதறியிருக்கின்றன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு +2 தேர்வு மதிப்பெண்களை தகுதியாக ஏற்க முடியாது என்று கூறும் ஒன்றிய அரசு, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதி இருந்தால் மட்டும் போதும் மதிப்பெண்கள் முக்கியமல்ல என தீர்மானித்திருப்பது திரைமறைவு தோல்விகளை காட்டுகிறது..
எனவே ஒன்றிய பாஜக அரசு மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்துவதை கைவிட வேண்டும் என்றும், வீண் பிடிவாதம் காட்டி ,வளரும் தலைமுறையினரின் உயிர்களோடு விளையாட கூடாது என்றும் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications