டோல்கேட்களில் கட்டணம் வசூலிக்கக் கூடாது... நிதின் கட்கரிக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.கடிதம்
சென்னை: நாடு முழுவதும் ஏப்ரல் 20-ம் தேதி முதல் டோல்கேட்கள் மீண்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், கடந்த 25 நாட்களுக்கு மேலாக டோல்கேட்களில் சுங்க கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனிடையே வரும் 20-ம் தேதி முதல் மீண்டும் டோல்கேட்களை வழக்கம்போல் இயக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ள நிலையில் அதனை கடுமையாக எதிர்த்துள்ளார் திமுக எம்.பி.தமிழச்சி தங்கபாண்டியன்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன், இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிப்பது விலைவாசியை மேலும் அதிகரிக்க வழி வகுக்கும் என்றும், டோல்கேட்களை திறக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

லாக்டவுனால் மிக அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள துறைகளில் போக்குவரத்து துறை முதலிடத்தில் இருப்பதாகவும், இது போன்ற நேரத்தில் சுங்க கட்டணம் வசூல் செய்வது மேலும் மக்களுக்கு சுமையை அதிகரிக்கும் எனவும் தமிழச்சி தங்கபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் மக்களின் நிலைமையை எண்ணிப்பார்த்து மத்திய அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications