பாஜக கூட்டணியில் தேமுதிக தேறுவது கஷ்டம்! அதிமுக +பாமக கூட்டணியில் சேர்ந்தால் வாய்ப்பு! -தராசு ஷியாம்
சென்னை: பாஜக கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிக வெற்றி பெறுவது கடினம் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் நோக்கருமான தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் இன்றி ஆலோசனை நடத்திய நிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார். அதிமுக, பாமக கூட்டணி அமையும் பட்சத்தில் அந்தக் கூட்டணியில் சேர்ந்தால் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். பிரேமலதா விஜயகாந்தை பொறுத்தவரை 4 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் தற்போதைய சூழலில் மாநிலங்களவை சீட் கிடையாது என்பதும் அதற்கு இன்னும் ஓராண்டு ஆகக் கூடும் என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் பாஜகவில் அப்படியில்லை 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவி உள்ளது. அதிலும் குறிப்பாக ஓரிரு மதங்களில் பாஜக ஆளும் பல மாநிலங்களில் ராஜ்யசபா சீட் காலியாகிறது. இதனால் அதிமுகவை காட்டிலும் பாஜக கூட்டணியில் இணைந்தால் ராஜ்யசபா எம்.பி.ஆக முடியும் என்பது பிரேமலதா விஜயகாந்தின் கணக்காக இருக்கிறது.
கட்சியை ஆக்டிவாக நடத்த வேண்டும் என்றால் எம்.பி. பதவி அவசியம் என்பதை அறிந்து வைத்துள்ள பிரேமலதா விஜயகாந்த், ராஜ்யசபா சீட் விவகாரத்தில் உறுதியாக உள்ளார். இதனிடையே கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரேமலதா வசம் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கொடுத்திருப்பதால் விரைவில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு தெரிந்துவிடும்.
இதனிடையே ராஜ்யசபா சீட்டுக்காக பாஜக தேமுதிகவுக்கு தேவைப்படுவதாகவும் தேமுதிகவின் வாக்கு வங்கியும், விஜயகாந்த் மறைவால் ஏற்பட்ட அனுதாப ஓட்டுக்களும் பாஜகவுக்கு தேவைப்படுவதாகவும் கூறிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம். பிரேமலதா விஜயகாந்துக்கு பிற மாநிலங்களில் இருந்து பாஜக ராஜ்ய சபா சீட் தருமா என்பது தனக்கு சந்தேகமாகவே உள்ளது என்றும் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிடம் பாமகவும் 1 ராஜ்யசபா சீட் கேட்டு வருவதாக கூறிய தராசு ஷியாம் இருக்கும் 2 ராஜ்யசபா சீட்களையும் பாமக, தேமுதிகவுக்கு விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக இருக்காது என தராசு ஷியாம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications