Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீரியஸாக பேசிக்கிட்டிருந்த ஓபிஎஸ்! பின்னால் அமர்ந்து சிரித்த அதிமுக எம்எல்ஏ..நேரு சொன்னது ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசினார். அப்போது கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், மகன், மகள் ஒரு வார்டிலும் இருப்பதாக குறிப்பிட்டார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த அதிமுக எம்எல்ஏ சிரித்தார்.

இதனிடையே ஓபிஎஸ் பேசும் போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இருந்தால் அது குடும்பம் இல்லை என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

இதை கேட்டு அவையில் சிரிப்பலை எழுந்தது. இப்படி ஒரு பேச்சு போய்க்கொண்டிருந்த போது அவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லை.

நேரு

நேரு

ஓபிஎஸ் பேச்சுக்கு பதில் அளித்த்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தான் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தல் வந்ததால், வார்டு மறுவரையறை செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். வருங்காலத்தில் வார்டு மறுவரையறை முறையாக செய்யப்படும் என்றும், அதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மறுவரையறை

மறுவரையறை

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசும் போது, கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும், மகன், மகள் ஒரு வார்டிலும் இருக்கின்றனர், கூட்டுக்குடும்பமாக இருந்தால் ஒரே வார்டில் வாக்குப்பதிவு செய்ய முடியாத நிலை இருக்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொண்டு மறுவரை செய்கின்ற போது, ஒரு வீட்டில் உள்ள அனைவரும் ஒரே வார்டில் வருமாறு மறுவரையறை செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்

அப்பாவு கேள்வி

அப்பாவு கேள்வி

சபாநாயகர் அப்பாவு பேசும் போது, "கணவர் ஒரு வார்டிலும், மனைவி ஒரு வார்டிலும் இருந்தால் அது குடும்பம் இல்லையே, வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும். வார்டு பட்டியலில் அப்படி இருக்காது என்று நான் நினைக்கிறேன்" எனறு கூறினார். அத்துடன் சபாநாயகர் அப்பாவு, இந்த கேள்விக்கு அமைச்சர் கே.என். நேரு பதில் அளித்து பேசுவார் என்று கூறினார்,.

கே.என்.நேரு பதில்

கே.என்.நேரு பதில்

அப்போது பதில் அளித்து நகராட்சி துறை கே.என். நேரு பேசுகையில், "ஒரு ஊரிலே ஒரு செல்வாக்கு மிக்க நபர் இருப்பாரே ஆனால், இவர் ஒரு வார்டிலே இருந்து கொள்ளலாம். இவர் மனைவி இன்னொரு வார்டில் நின்று வெற்றி பெறலாம் என்பதற்காக இப்படி வார்டுகளை பிரித்து வைத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் இருக்கக்கூடாது என்று ஓபிஎஸ் அவர்கள் கேட்டிருக்கிறார். அவர்களுடைய ஆட்சி காலத்தில் இப்படி உருவாக்கப்பட்டது. எனவே ஓபிஎஸ் அவர்கள் சொன்னது முக்கியமான கருத்து, அதை கமிட்டியில் சொல்லி நிச்சயமாக செய்யலாம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+