ஆஹா.. தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமாம்.. வானிலை மையம்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வேலூர், கோவை, திண்டுக்கல், தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று கூறுகையில், "வளிமண்ல மேலடுக்கு சுழற்றி காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, தேனி, நீலகிரி, திண்டுக்கல்,கோவை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை உள்பட 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் புதுச்சேரியிலும் காரைக்கால் பகுதியிலும் அனேகஇடங்களில் மிதமான மழையும் சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு வேளைகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அளவிலும் குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியல் அளவிலும் இருக்கும்.
தென்மேற்கு வங்ககடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மணிக்கு 45 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும். எனவே அடுத்த24மணிநேரத்திற்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவேண்டாம். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா 10 செமீ மழை பெய்துள்ளது" என்றார்கள்.












Click it and Unblock the Notifications