Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரலாற்றில் இப்படி நடந்ததே இல்லை.. செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக முழு கொள்ளவை எட்டியது.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்நிலையில் தான் வரலாற்றில் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரி முதல் முறையாக முழு கொள்ளளான 24 அடியை எட்டி உள்ளது. இதுவரையில் இல்லாமல் திடீரென்று அதிகாரிகள் முழு கொள்ளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்தன் பின்னணி குறித்த முக்கிய தகவலை இங்கு பார்க்கலாம்.

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரி 24 அடி உயரம் கொண்டது. இந்த 24 அடிக்கு தண்ணீரை தேக்கும்போது ஏரிக்குள் மொத்தம் 3645 மில்லியன் கனஅடி நீர் இருக்கும்.

chembarambakkam lake chennai

ஆனால் ஒருபோதும் ஏரி முழு கொள்ளவை எட்டாது. ஏரியின் பாதுகாப்பு காரணங்களுக்காக ஏரி முழு கொள்ளவை எட்டும் முன்பு உபரி நீர் திறந்து விடப்படும். இதற்கு முன்பு 23 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு உபரிநீர் முழுமையாக திறந்து விடப்பட்டது.

ஆனால் கடந்த 2015ம் ஆண்டில் முதல் முறையாக 23.45 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் முதல் முறையாக செம்பரம்பாக்கம் ஏரியில் முழு கொள்ளாவான 24 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரி தற்போது நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரிக்குள் 3645 மில்லியன் கனஅடி நீர் உள்ளது.

அதோடு ஏரிக்குள் விநாடிக்கு 500 கனஅடி நீர் வருகிறது. இதில் 250 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. தற்போது ஏரி முழு கொள்ளவை எட்டிய நிலையில் உள்ளே வரும் 500 கனஅடி நீர் அப்படியே திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இப்போது பலருக்கும் ஒரு கேள்வி எழுந்துள்ளது. இதுவரை இல்லாமல் திடீரென்று செம்பரம்பாக்கம் ஏரியில் அதிகாரிகள் முழு கொள்ளவை தேக்கி வைக்க காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் வந்துள்ளது. அதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது ஏரியின் மதகுகள், ஏரிக்கரைகளின் பலத்தை அறிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்கு ஏரியின் மொத்த உயரமான 24 அடிக்கு தண்ணீர் சேமித்து 100 சதவீதம் தேக்கி வைத்துள்ளனர். தற்போது ஏரியில் உள்ள ஷட்டர்களுக்கு சென்சார் மற்றும் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் இருந்தே ஏரியின் நீர்மட்டம் அறிந்து கொள்ளுதல், அங்கிருந்தே உபரிநீரை திறக்கும் வசதி ஆகிய வசதிகள் உள்ளதால், தற்போது 100 சதவீதம் நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் தேக்கி வைத்து சோதனை செய்துள்ளனர்.

இதன்மூலம் செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது தெளிவாகி உள்ளது. ஏரியின் பாதுகாப்பு சார்ந்து எந்த பயமும் மக்களுக்கு தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் சென்னைக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி, புழல் ஏரிகளும் ஏற்கனவே நிரம்பி விட்டன. இதனால் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்கின்றனர் அதிகாரிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+