சென்னை மாநகராட்சி பட்ஜெட் : மேயர் பிரியா வெளியிட்ட ஒற்றை அறிவிப்பு.. குஷியான கவுன்சிலர்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா 2023-24-ம் நிதி ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்றைய பட்ஜெட்டில் மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மேயர்பிரியா அறிவித்தார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு நேரடி பட்ஜெட் ஐந்து ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், மாநகராட்சி தேர்தல் நடத்தப்பட்டது. திமுக சென்னை மாநகராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் வென்றது, இதனால் சென்னை மேயராக பிரியா தேர்வு செய்யப்பட்டார்.
மேயராக பதவியேற்ற பிரியா 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவுபடுத்துதல், பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட 67 முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டார்.

கூடுதல் அறிவிப்பு
இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் திங்கள்கிழமையான இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தில் மேயர் பிரியா பட்ஜெட்டை வாசிக்கிறார். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த முறை கூடுதலான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது

சொத்து வரி
ஏனெனில் கடந்த ஒரு வருடத்தில் சென்னை மாநகராட்சிக்கு நிலுவையில் இருந்த சொத்து வரி, நீண்டகால வாடகைகள் போன்றவை அதிக அளவு வசூலிக்கப்பட்டிருப்பதால் நிதி ஆதாரம் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது இதனால், 2022-23-ம் ஆண்டைக்காட்டிலும் இந்த நிதியாண்டில் நிதி பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

பட்ஜெட் தாக்கல்
இந்நிலையில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறும் போது, மாநகராட்சி உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக அதிகரிக்கப்படும் . சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று போட்டி தேர்வில் வென்று கல்லூரி சேரும் மாணவர்களுக்கு சலுகை வழங்கப்படும். மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்விக் கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்தும் . ஜேஇஇ, க்ளேட், நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வென்று உயர்கல்வி சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் செலுத்தப்படும் .

பள்ளிகள்
சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு மாலையில் சிறுதீனி எனப்படும் 'ஸ்நாக்ஸ்' வழங்கப்படும் . சென்னை பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் நொறுக்குத் தீனி வழங்க மாநகராட்சி பட்ஜெட்டில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உடன் இணைத்த 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடி செலவில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் .

10 பள்ளிகள்
சென்னையில் 10 மேல்நிலை பள்ளிகளில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பள்ளி மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் நடவடிக்கையில் மாதிரி ஐ.நா.சபை குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார்.

மேயர் பிரியா
இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை (செவ்வாய்) பட்ஜெட் மீதான விவாதம் நடக்கும். கட்சி வாரியாக கவுன்சிலர்கள் பட்ஜெட் குறித்து விவாதத்தின் மீது பேசுவார்கள். இறுதியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலுரை நிகழ்த்துவார். கூட்டத்தின் இறுதியில் 2023-24-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும்.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications