நகர்வலம் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! 81 கி.மீ தூரம் பயணம்! சென்னையில் 7 இடங்களில் நேரில் ஆய்வு!
சென்னை: சென்னையில் வெள்ளத்தடுப்பு பணிகள் மற்றும் மழைநீர் வடிகால்களை நேரில் சென்று ஆய்வு நடத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், பிற்பகல் 3 மணி வரை இடைவிடாது 81 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஆய்வு செய்கிறார்.
அதன் விவரம் வருமாறு;

காலை 11 மணி
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காலை 11 மணிக்கு புறப்படும் முதலமைச்சர் ஸ்டாலின் 14 கி.மீ.தூரம் பயணித்து மதுரவாயல் புறவழிச்சாலை, போரூரில் அமைக்கப்பட்டு வரும் உள்வட்டச் சாலையை பார்வையிடுகிறார். அதன் பிறகு அங்கிருந்து 1 கிமீ தூரம் பயணித்து தந்திகல் கால்வாயில் ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். இதைத்தொடர்ந்து 15 கிலோமீட்டர் தூரம் பயணித்து முடிச்சூர் புறவழி வட்டச்சாலைக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின் அங்கு வரதராஜபுரத்தில் மழை நீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்கிறார்.

மதியம் 1.15
முடிச்சூர் பகுதியிலிருந்து நண்பகல் 12.30 மணியளவில் புறப்படும் முதல்வர் ஸ்டாலின் முக்கால் மணி நேர பயணத்தில் 25 கிலோமீட்டர் பயணித்து நூக்கம்பளையம் பாலத்தில் ஆய்வு செய்கிறார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ள அரசன்காலணியில் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலின் டி.எல்.எஃ.சவுத் பகுதியில் மதுரபாக்கம் ஓடையில் மழை நீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு நடத்துகிறார்.

7-வது இடம்
இப்படி 6 இடங்களில் ஆய்வு நடத்திவிட்டு 7-வது இடமாக செம்மஞ்சேரி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறகு அங்கிருந்து 23 கிமீ தூரம் பயணித்து ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தை அடைகிறார். காலை 11 மணிக்கு தொடங்கும் முதலமைச்சரின் ஆய்வு நிகழ்ச்சியானது உணவு இடைவேளை எதுவுமின்றி பிற்பகல் 3 மணி வரை தொடரவுள்ளது. முதலமைச்சருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்ரமணியன் ஆகியோர் உடன் பயணிப்பார்கள் எனத் தெரிகிறது.
Recommended Video

போக்குவரத்து சீர்
ஆழ்வார்பேட்டை -போரூர் -மதுரவாயல் புறவழிச்சாலை -முடிச்சூர் -செம்மஞ்சேரி -ஆழ்வார்பேட்டை என முதலமைச்சர் பயணிக்கவுள்ள வழிகளில் போக்குவரத்தை சீர் செய்ய கூடுதல் போக்குவரத்துக் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வெளியூர்களுக்கு மட்டும் ஆய்வுக்கு செல்லமாட்டேன் சென்னையிலும் நேரில் ஆய்வு நடத்துவேன் என்பதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications