இ.வி.எம் மெஷின் அறை.. வேகமாக அருகில் வந்த லாரி.. திரண்ட கட்சியினர்.. பரபரப்பான லயோலா கல்லூரி!
சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள் லாரி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பள்ளிகளில் கொண்டு சென்று வைக்கப்பட்டன.

தமிழகத்தில் தேர்தல்
அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்தல்
அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

லாரி வந்ததால் பரபரப்பு
இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் கழிவறை வசதி கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள்ளும் கழிவறை வசதி கொண்ட ஒரு லாரி கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடிய முகவர்கள்
லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் வருகை தந்திருந்த பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொன்னுசாமி அந்த கழிவறை வசதி கொண்ட லாரியை ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க கட்சியின் முகவர்கள் பெருந்திரளாக அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தேகம் எழுந்துள்ளது
லயோலா கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க கழிவறை வசதி கொண்ட புதிதாக கண்டெய்னர் லாரி கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும், பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. பரபரப்பு நிலவியதால் லயோலா கல்லூரி வளாக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications