இ.வி.எம் மெஷின் அறை.. வேகமாக அருகில் வந்த லாரி.. திரண்ட கட்சியினர்.. பரபரப்பான லயோலா கல்லூரி!
சென்னை: வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள் லாரி ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பள்ளிகளில் கொண்டு சென்று வைக்கப்பட்டன.

தமிழகத்தில் தேர்தல்
அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் தேர்தல்
அப்போது வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது. அதில் ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததால் அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

லாரி வந்ததால் பரபரப்பு
இதனால் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று நள்ளிரவு கோவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் கழிவறை வசதி கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று கொண்டு வரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் சென்னை லயோலா கல்லூரி வளாகத்திற்குள்ளும் கழிவறை வசதி கொண்ட ஒரு லாரி கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

கூடிய முகவர்கள்
லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய மக்கள் நீதி மய்யம் சார்பில் வருகை தந்திருந்த பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பொன்னுசாமி அந்த கழிவறை வசதி கொண்ட லாரியை ஆய்வு செய்தார். அப்போது தி.மு.க, அ.தி.மு.க கட்சியின் முகவர்கள் பெருந்திரளாக அங்கே கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தேகம் எழுந்துள்ளது
லயோலா கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டிடங்களில் கழிவறை வசதிகள் உள்ளன. நிலைமை இவ்வாறு இருக்க கழிவறை வசதி கொண்ட புதிதாக கண்டெய்னர் லாரி கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியும், பலத்த சந்தேகமும் எழுந்துள்ளது. பரபரப்பு நிலவியதால் லயோலா கல்லூரி வளாக பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications