காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம்... பொதுமக்களுக்கு அரசு அறிவிப்பு
காணும் பொங்கல் பண்டிகை நாளில் பொதுமக்கள் கடற்கரைக்கு வர வேண்டாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ஆம் தேதியன்று பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு வரவேண்டாம் என்று அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கு வரவேண்டாம். பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்களும் பொதுமக்கள் கடற்கரை பகுதிகளில் இரவு 10 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டுக்கு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது போன்று காணும் பொங்கல் அன்று வருகிற 16ஆம் தேதியும் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காணும் பொங்கல் அன்று 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புத்தாண்டு போலவே காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரை சீல் வைக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளான 14ஆம் தேதி, மாட்டுப்பொங்கல் தினமான 15ஆம் தேதி, காணும் பொங்கலுக்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமை ஜனவர் 17ஆம் ஆகிய 3 நாட்களிலும் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் மெரினா கடற்கரையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மெரினா கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
தற்போது முககவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த 3 நாட்களிலும் மெரினா கடற்கரையில் கூடுதலாக மாநகராட்சி ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் பெசன்ட்நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் காணும் பொங்கல் அன்று பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அங்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications