மார்ச் 6ல் வருகை.. மோடியின் வண்டலூர் மாநாடு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
சென்னை:வண்டலூரில் பிரதமர் மோடி வருகையையொட்டி... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
வருகின்ற மார்ச் 6ம் தேதி நடக்கவுள்ள மாநாட்டில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக, பாமக கட்சிகளின் முக்கிய தலைவர்களும் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர். வண்டலூர் மாநாட்டு திடல் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
அபிநந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம்.. இனி அது மாறும்... பிரதமர் மோடி புகழாரம்
வண்டலூர் முழுவதும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க டெல்லியில் இருந்து சென்னைக்கு தனி விமானம் மூலம் வருகிறார்.
— Oneindia Tamil (@thatsTamil) March 2, 2019
இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூருக்கு தனி ஹெலிகப்டர் மூலம் மாநாட்டு திடலுக்கு வருகை தரவுள்ளார். அதற்காக வண்டலூரில் மூன்று ஹெலிபேடுகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மாநாட்டு மேடை பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.