தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் நல்ல மழை
சென்னை: தென்மேற்கு பருவமழை, வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் நாட்டில் பரவலாக மழை பொழிவும் குறைவாக இருந்தது. ஆனால் படிப்படியாக இது அதிகரித்தது. இதுவரை, தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், தென் தமிழகத்தில் 13 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வடமேற்கு மாநிலங்களில் மழை குறைந்திருந்தது. மத்திய இந்தியப் பகுதிகளில் 3 சதவீதம் குறைவாக தென்மேற்கு பருவமழை பொழிவு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் பரவலாக 97 சதவீதம் அளவுக்கு பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மழை
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மழை பெய்து வருகிறது. வேளாங்கண்ணி, நாகூர், திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

டெல்டா மாவட்டங்கள்
குறுவை சாகுபடி செய்த நிலங்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இலுப்பூர், அன்னவாசல், கந்தர்வகோட்டை மற்றும் சித்தன்னவாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. தஞ்சை, திருவையாறு மற்றும் கும்பகோணம் பகுதிகளில் கனமழை பெய்தது.

நாகப்பட்டினம் மழை
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications