தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் நல்ல மழை
சென்னை: தென்மேற்கு பருவமழை, வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஜூன் மாதத்தில் நாட்டில் பரவலாக மழை பொழிவும் குறைவாக இருந்தது. ஆனால் படிப்படியாக இது அதிகரித்தது. இதுவரை, தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், தென் தமிழகத்தில் 13 சதவீதம் அளவிற்கு கூடுதலாக மழை பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் வடமேற்கு மாநிலங்களில் மழை குறைந்திருந்தது. மத்திய இந்தியப் பகுதிகளில் 3 சதவீதம் குறைவாக தென்மேற்கு பருவமழை பொழிவு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்றும் ஆகஸ்ட் மாதத்தில் பரவலாக 97 சதவீதம் அளவுக்கு பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை
வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மழை
நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த நான்கு தினங்களாக மழை பெய்து வருகிறது. வேளாங்கண்ணி, நாகூர், திருக்குவளை உள்ளிட்ட இடங்களில் விடிய விடிய பெய்த மழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

டெல்டா மாவட்டங்கள்
குறுவை சாகுபடி செய்த நிலங்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இலுப்பூர், அன்னவாசல், கந்தர்வகோட்டை மற்றும் சித்தன்னவாசலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் மழை நீடித்தது. தஞ்சை, திருவையாறு மற்றும் கும்பகோணம் பகுதிகளில் கனமழை பெய்தது.

நாகப்பட்டினம் மழை
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், சிக்கல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருமருகல் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications