தாய்மாமன், அத்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர்.. திருத்தணியில் ஷாக்.. பரபர வாக்குமூலம்
திருவள்ளூர்: இளைஞர் ஒருவர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தாய்மாமன் மற்றும் அத்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் திருத்தணியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாருதி நகரில் வசித்து வந்தவர் சஞ்சீவரெட்டி( 65). பைனான்சியர். அவரது மனைவி மாலாவுடன் வசித்து வந்தார்.
திருத்தணி பகுதியில் ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வரும் சஞ்சீவி ரெட்டியுடன் அவரது தங்கை மகன் ரஞ்சித் குமார்( 28) என்ற வாலிபர் நெருக்கமாக பழகி வந்தார். திருத்தணிமில் ஸ்வீட் கடைகள் நடத்தி வரும் ரஞ்சித்குமார் வியாபாரத்திற்கு சஞ்சீவி ரெட்டி பண உதவி செய்ததாக கூறப்படுகிறது.

பீரோ உடைப்பு
இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் சஞ்சீவி ரெட்டியின் கைபேசி ஸ்விட்ச் ஆப் ஆனதால் பட்டாபிராமபுரத்தில் வசிக்கும் அவரது தம்பி பாலு திருத்தணியில் சஞ்சீவி ரெட்டி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு பூட்டியிருந்த நிலையில் பீரோ திறக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.

போலீஸார் தேடினர்
இதனால் சந்தேகமடைந்த அவர் கடந்த 29ஆம் தேதி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். வழக்குப்பதிவு செய்து திருத்தணி போலீசார் காணாமல்போன கணவன் மனைவியை தேடி வந்தனர். சஞ்சீவி ரெட்டி செல்போன் சிக்னல் கடைசியாக சித்தூர் மாவட்டத்தில் காட்டியதால் சந்தேகமடைந்த போலீசார் செல்போனில் அவர் கடைசியாக பேசிய ரஞ்சித்குமாரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அத்தை மாமா கொலை
வியாபாரத்தில் அதிக நஷ்டம் ஏற்பட்டதாலும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததாலும் தாய்மாமன் மற்றும் அத்தையை கொன்று அவர்களது பணம் மற்றும் நகையை எடுத்து ஆடம்பரமாக ரஞ்சித் குமார் வாழ திட்டமிட்டார். திட்டமிட்டப்படி சம்பவத்தன்று கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி தாய்மாமன் அத்தையை காரில் அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் சிக்கராஜபுரம் காலனியைச் சேர்ந்த ராபர்ட் ,விமல் ராஜ் என்ற இரு நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு காரில் வைத்து தாய்மாமன் மற்றும் அத்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தோம்.

வாக்குமூலம்
ராமச்சந்திராபுரம் காட்டில் இரு உடல்களையும் புதைத்தனர். சித்தூர் காட்டுப்பகுதியில் அவர் பயன்படுத்திய செல்போனை வீசினோம். அதன்பின்னர் அவரது வீட்டிற்கு சென்று பீரோவில் வைத்திருந்த நகை, பணம் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றேன் இவ்வாறு போலீசார் விசாரணையில் தெரிவித்தார். ரஞ்சித் குமார் மற்றும் கூட்டாளிகள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடம்பர வாழ்க்கையில் கடன் தொல்லை அதிகரித்து பணம் தேவைப்பட்டதால் தாய்மாமன் அத்தையை கொலை செய்த சம்பவம் திருத்தணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications