ரஜினிகாந்த், விஜய் அரசியலுக்கு வரலாமா? முடிவெடுக்கும் முன்னால்....!
சென்னை: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா... ஒரு புது தகவலை உலவவிட்டு இருக்காங்க.
வாக்கு எண்ணிக்கை அன்று தபால் ஓட்டுக்கள் எண்ணும்போதே பிஜேபி முன்னிலைன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டாராம்.

உள்ளுக்குள்ள பிஜேபி ஜெயிச்சதில் அவ்ளோ மகிழ்ச்சியாம் ரஜினிக்கு. உடனே வாழ்த்துக்கள் சொல்லிட்ட அவர், தமிழ் நாட்டில் ஜெயிச்ச ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வெகு நேரம் பிடித்ததாம். சும்மா சம்பிரதாயத்துக்கு சொல்ற மாதிரி பேருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கார்னு திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒரு புது செய்தியை உலவ விட்டு இருக்காங்கன்னு சொன்னோமே.. அது என்ன தெரியுமா... பிஜேபி அறுதி பெரும்பான்மை வந்ததில் ரஜினிக்கு ஆன்மீக கட்சி ஆரம்பிக்க புத்துணர்ச்சி வந்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
இதே ஆசையில் இருக்கும் தளபதி விஜய்க்கும் ஒரு விஷயத்தை அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதாவது தமிழ் நாட்டு ரஜினிக்கு இணையான ரசிகர்களை கொண்டவர் சிரஞ்சீவி. இவரும் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நடக்கவில்லை.
சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுக்கு தமிழ் நாட்டில் விஜய்க்கு நிகரான ரசிகர்கள். ஆனால், இப்போது அவரும் தேர்தலில் தோல்வி கண்டிருக்கிறார்.
எனவே, இவர்கள் இருவரின் அரசியல் பிரவேசம், அவர்களின் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆராய்ந்த பின் அரசியலில் ஈடுபடுவது நல்லது என்று ஒரு தகவலை அரசியல் ஆர்வலர்கள் உலவ விட்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications