சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம்
சென்னை: தவெக சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்கப்பட்டது. பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிலையில், அவர் இடதுசாரிகள் மற்றும் விசிகவை இணைத்து தவெக தலைமையிலான கூட்டணி என்று குறிப்பிட்டு ட்வீட் போட்டிருந்தது பெரிய பஞ்சாயத்தாக வெடித்தது. இதற்கு திருமாவளவன் அளித்திருக்கும் பதில் கவனம் பெற்றிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடிக்க, போதுமான பலத்தை கொண்டிருக்காததால் காங்கிரஸ், இடதுசாரிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்திருந்தன.

கூட்டணியா? ஆதரவா?
எனவே பதிலுக்கு, காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள் பதவி மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. விடுதலை சிறுத்தைகள் மற்றும் ஐயுஎம்எல் கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. இடதுசாரிகள் அமைச்சர் பதவியை ஏற்க மாட்டோம், வெளியிலிருந்துதான் ஆதரவு என்று சொல்லிவிட்டன.
இப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த எம்பி சீட்டில், பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார்.
பிரவீன் சக்கரவர்த்தி
முன்னதாக அவர் தனது x பக்கத்தில், "தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (TVK+INC+VCK+IUML+CPI+CPM) கூட்டணியின் முதல் MP வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மற்றும் தமிழக CM விஜய் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இங்குதான் பிரச்சனையே வெடித்தது. விஜய்க்கு ஆதரவு என்பது கூட்டணியின் அடிப்படையில் கிடையாது. ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதால்தான்.. எனவே அதை கூட்டணியாக சித்தரிக்க கூடாது என்று இடதுசாரிகள் கொந்தளித்தனர்.
சிபிஎம் கண்டனம்
குறிப்பாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், "புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது. பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்" என்று காட்டாமாக விமர்சித்திருந்தார்.
விசிகவின் நிலைப்பாடு
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து திருமாவளவன் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "பிரவீன் சக்கரவர்த்தி இன்று காலையில் எங்களை தொடர்பு கொண்டு, இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.. கூட்டணி கட்சியின் சார்பில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.
ஆனால், ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்காக விழுப்புரம் பயணிக்க இருக்கிறேன். ஆகவே கட்சியின் சார்பில், முன்னாள் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பங்கேற்பார் என்று தெரிவித்திருந்தேன்.
அதேபோல பிரவீன் சக்கரவர்த்தியின் ட்விட்டர் பதிவு பற்றி தெரியவில்லை. ஒருவேளை கூட்டணியாக பேசலாம் என்று தவெக தலைமை கருதியிருக்கலாம். இருப்பினும் எங்களுக்கு அப்படியான எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.
-
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
விஜய்க்கு பவுன்சர் பாதுகாப்பு ஏன்? எம்ஜிஆர் 5 பேரை வச்சிருந்தாரே! அதிமுக இன்பதுரையை மடக்கிய சரவணன் -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications