இளையராஜாவுக்கு நடந்தது அவமானத்தின் உச்சம்... பிரசாத் ஸ்டூடியோவுக்கு திருமாவளன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டூடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: இளையராஜாவுக்கு ஆதரவாக களத்தில் விசிக!

    இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வதற்காகவும் தனது பொருட்களை பெறவும் அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஒர நாள் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

    Thirumavalavan condemns Prasath Studio for breaking the lock of Ilayarajas room

    ஆனால் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை.

    அதனுள்ளே இருந்த அவரது இசைகுறிப்புகள், விருதுகள் உள்பட பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வேறு அறையில் மொத்தமாக குவித்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி இளையராஜாவிடம் அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தபோது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தான். தான் தியானம் செய்த அறையே அங்கு இல்லாதபோது அங்கு வந்து என்ன செய்ய? என்று இளையராஜா வேதனை அடைந்தார்.

    இந்நிலையில் இளையராஜா அறையின் பூட்டை உடைத்து உடைமைகளை அப்புறப்படுத்தியது அநாகரீகம் என்று பிரசாத் ஸ்டுடியோவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூகத்தில் அவருக்குள்ள நன்மதிப்பைக்கூட கணக்கில் கொள்ளாமல் அவரை அவமதித்திருப்பது அநாகரீகத்தின் உச்சம். இவரால்தான் அந்த ஸ்டுடியோவுக்குப் பெருமை என்பதை மறந்து செய்த நன்றி கொன்ற இழிசெயல் என்றும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+