தீக்குளித்த நாம் தமிழர் விக்னேஷ்.. சீமான் கைவிட்டாலும் திருமா விடமாட்டார்! வன்னியரசு நெகிழ்ச்சி
சென்னை: காவிரி விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தீக்குளித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி தினமாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "காவேரி நீர் உரிமைக்காக 16-09-2016 இன்று தீக்குளித்து உயிர்நீத்த மாணவன் விக்னேஷின் பெற்றோருடன் இன்று மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தோம். மாணவனின் ஈகத்தைப் போற்றும் வகையில் செம்படம்பர் 16 ஆம் நாளை காவேரி எழுச்சி நாளென அறிவித்திட வேண்டுமென அவர்கள் மாண்புமிகு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்." என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ட்விட்டரில், "நீங்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம்
ஆனால்,
உங்களுக்கும் சேர்த்து போராடுவது
எமது தலைவர்
திருமாவளவன்"
(கவியரங்க கவிதை)
காவிரி நதி்நீர் விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடந்த செப்டம்பர் 15, 2016 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னையில் பேரணி நடைப்பெற்றது. அப்பேரணியில் பங்கேற்ற திருவாரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் பொறுப்பாளரான தம்பி விக்னேஷ் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக்கொண்டார்.
காவேரி நீர் உரிமைக்காக 16-09-2016 இன்று தீக்குளித்து உயிர்நீத்த மாணவன் விக்னேஷின் பெற்றோருடன் இன்று மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களைச் சந்தித்தோம். மாணவனின் ஈகத்தைப் போற்றும் வகையில் செம்படம்பர் 16 ஆம் நாளை காவேரி எழுச்சி நாளென அறிவித்திட வேண்டுமென அவர்கள் மாண்புமிகு… pic.twitter.com/gmKMuyxWWH
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 13, 2023
தமிழர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்; காவிரி நீர் தமிழர்களின் உரிமை எனும் முழக்கத்தை எழுப்பியே தீக்குளித்தான். மறு நாள் அதாவது செப் 16 அன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். "தம்பி விக்னேஷ் வீரச்சாவடைந்த பிறகு நாம் தமிழர் கட்சியும் சீமானும் தம்மை கை விட்டதாகவும் விக்னேஷ் பெயரை சொல்லி வசூல் செய்து துரோகமிழைத்து விட்டனர்"என விக்னேஷ் தாயார் குற்றம் சாட்டினார்.
“நீங்கள் எந்த கட்சியிலும் இருக்கலாம்
— வன்னி அரசு (@VanniKural) September 13, 2023
ஆனால்,
உங்களுக்கும் சேர்த்து போராடுவது
எமது தலைவர்
திருமாவளவன்”
(கவியரங்க கவிதை)
காவிரி நதி்நீர் விவகாரத்தில் கன்னடர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து கடந்த செப்டம்பர் 15,2016 ஆம் ஆண்டு #நாம்தமிழர்கட்சி சார்பாக சென்னையில் பேரணி… pic.twitter.com/LcQU4bLRNe
இந்த சூழலில் தமது மகன் வீரச்சாவடைந்த நாளான செப்டம்பர் 16 ம் நாளை காவிரி எழுச்சி நாள் என அறிவிக்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு முதல்வரை சந்தித்த எழுச்சித்தமிழர் தம்பி விக்னேஷ் நினைவு நாளை காவிரி எழுச்சி நாள் என அறிவிக்க கோரிக்கை வைத்தார். முதல்வரும் பரிசீலிப்பதாக சொல்லியுள்ளார்.
தமிழர் உரிமைக்காகவும் தமிழ்நாட்டு உரிமைக்காகவும் வீரச்சாவடைந்த தோழர்களின் ஈகத்தை மதிப்பது விடுதலைச் சிறுத்தைகளின் கடமை. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியினரால் புறக்கணிக்கப்பட்ட, துரோகம் இழைக்கப்பட்ட தொண்டனின் கோரிக்கையை தாயின் கனவை நிறைவேற்றுவதும் சிறுத்தைகளின் பண்பு. (துவக்கத்தில் சொன்ன கவியரங்க கவிதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள். புரியும்.)" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications