நாங்குநேரியில் காங்கிரஸ்.. விக்கிரவாண்டியில் திமுக .. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை : நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதி, அதேபோல் விக்ரவாண்டி தொகுதி திமுகவின் தொகுதி, ஆகையால் நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.
கன்னியாகுமரி தொகுதியில் எம்பியாக வெற்றி பெற்ற வசந்தகுமார், நாங்குநேரி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்த தொகுதி தற்போது காலியாக உள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதால் அந்த தொகுதியும் காலியாக உள்ளது.
ரயில்வே தேர்வில் தமிழ் புறக்கணிப்பு.. தெற்கு ரயில்வே அலுவலகத்தை முற்றுகையிட்ட கனிமொழி.. பரபரப்பு
விட்டுக்கொடுக்க காங்கிரஸ் மறுப்பு
இதில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விரும்புவதாக சொல்லப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியை திமுகவுக்கு விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக சார்பில் உதயநிதி களம் இறங்குவரா என்ற பரபரப்பு நிலவுகிறது.
விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
இந்நிலையில் திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தே விண்வெளி ஆராய்ச்சிகள் பல செய்யப்பட்டு வந்துள்ளன. சந்திராயன் 2 இரண்டு கிலோமீட்டர் உள்ள நிலையில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்தாலும் இந்த முயற்சியை மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
விக்ரவாண்டியில் திமுக
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் நின்று வெற்றி பெற்ற தொகுதி அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி திமுகவின் தொகுதி. ஆகையால் நாங்குநேரியில் காங்கிரசும் விக்கிரவாண்டியில் திமுகவும் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.
ஸ்டாலினுக்கு பாராட்டு
காங்கிரஸ் கட்சி ஆய்வு பண்ணும் நோக்கத்தில் காங்கிரஸ் பலமாக இருக்கிறதா என்ற கேள்வியை கே.எஸ். அழகிரி கேட்டிருக்கலாம். சி.பி. இராதாகிருஷ்ணன் திமுக. தலைவர் ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் சபை நாகரிகம் கருதி அவரைப் புகழ்ந்து பேசி இருக்கலாம்" என கூறினார்.