ரெஸ்ட் எடுத்த மழை வெளுத்து வாங்கப்போகுதாம்..8 மாவட்ட மக்களே உஷார்..யாரெல்லாம் கவனம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூரில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் எனவும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் டிசம்பர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 5ஆம் தேதி முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரி சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications