உளவுத்துறை வார்னிங்! முதல்வர் ஸ்டாலினுக்கு மத அடிப்படைவாதிகளிடமிருந்து அச்சுறுத்தல்! போலீஸ் குவிப்பு
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் திருச்சி பயணத்தை முன்னிட்டு, அவருக்கு மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் இன்று நடைபெறும் வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சி செல்கிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் இந்த மாநாடு சமயபுரம் டோல்கேட் அருகே பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது.
இன்று காலை இதற்காக 8.30 மணிக்கு அங்கு கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சி தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.

திருச்சி
காலை 11.30 மணிக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் ஏறுகிறார். 12.30 மணிக்கு திருச்சி ஏர்போர்ட்டில் இருந்து சமயபுரம் செல்கிறார். அங்கு அவருக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினை வரவேற்று கவுரவிக்கிறார். இதன் பின் இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்ற உள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு எப்போதும் போல இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வரின் பாதுகாப்பிற்கு மத அடிப்படை வாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் உள்ளது. அதேபோல் தமிழ் அடிப்படை பேரினவாதிகளிடம் இருந்தும், அதிருப்தியில் இருக்கும் சில நபர்களிடம் இருந்தும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத அடிப்படை வாதிகள்
முதல்வர் ஸ்டாலினுக்கான நெருக்கமான பாதுகாப்பு, அவருக்கான கோர் செல் பாதுகாப்பு குழு மூலம் வழங்கப்படும் என்று திருச்சி சிட்டி போலீஸ் கமிஷ்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு அமைப்புகள் கொடுத்த தகவலின்படி முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கூடுதல் பாதுகாப்பு
இதற்காக கூடுதல் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் போலீஸ் தரப்பு வட்டாரங்கள், இது பொதுவாக கொடுக்கப்படும் எச்சரிக்கைதான். முதல்வர் வெளியூர்களுக்கு செல்லும் போது இது போல பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதேபோல் அவருக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருந்தால் அது பற்றியும் சொல்லப்படும். இது வழக்கமாக உள்ள நடைமுறைதான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications