மிரட்டும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்.. இன்று முதல் அமல்
சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நீதிமன்றங்களில் மாஸ்க் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் மாஸ்க் அணிந்து வருவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று கூட ஒருநாள் பாதிப்பு 514- ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்பால் தற்போது உயிரிழப்பும் ஏற்படுவது அதிர்ச்சி அளித்து வருகிறது.

நேற்று கூட சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து இருந்தார். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3,195- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...மருத்துவமனைகளில் தயார் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் சுமார் 12 மடங்கு அதிகரித்துவிட்டது.

புதிதாகப் பரவும் ஓமின்காரன் திரிபு வைரசே தொற்று பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வரும் 17 ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் மாஸ்க் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிந்து வருவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
வழக்கு பட்டியலில் இல்லாவிட்டால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற அறை, நீதிபதி அறை உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications