பீச்சில் வைத்து.. பெண்களிடம் ஆபாச கேள்விகள்.. மோசமான எடிட்டிங்.. யூடியூபரை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்
சென்னையில் ஆபாச கேள்விகளை கேட்ட யூடியூப் சேனல்காரர்கள் 3 பேர் கைதானார்கள்
சென்னை: பீச்சில், ஆபாசமான, அசிங்கமான கேள்விகளை கேட்டு, அதனை இன்னும் மோசமாகவும், தவறாகவும் எடிட் செய்து பதிவிறக்கம் செய்த யூடியூப் சேனல்காரர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
Recommended Video

ஒரு ஸ்மார்ட் போன், ஒரு எடிட்டிங் ஆப் இருந்தால் போதும், யூ டியூப் சேனல் தொடங்கி விடலாம் என்கிற நிலை உள்ளது.. சுவாரஸ்யமான விஷயங்களை தந்துவிட்டால், இல்லத்தரசிகள் முதல் குழந்தைகள் வரை இந்த சேனலுக்கு நேயராகி விடுவார்கள்.

ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்றால்தான், அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.. ஆனால் யூடியூப் சேனலுக்கு அப்படி இல்லை, அதனால்தான் யார் வேண்டுமானாலும் இதனை ஆரம்பித்து விடுகிறார்கள்..
ஒரு வீடியோவை எந்த அளவுக்கு வியூவர்ஸ் பார்க்கிறார்களோ, அந்த அளவுக்கு வருமானம் கிடைக்கிறது.. அதனால், அதிக பணம் மூலதனமோ, அறிவோ, படிப்போ, அனுபவமோ, முதிர்ச்சி பக்குவமோ இதற்கு தேவையில்லை.. ஜஸ்ட் பொழுது போக்கான வீடியோக்களை பதிவிட தெரிந்திருக்க வேண்டும்.. அவ்வளவுதான்..
நல்ல விஷயங்களை பதிவிடும் போது தானாகவே வியூவர்ஸ் கூடிவிடுவார்கள்.. எனவே இந்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் யூடியூப் சேனல் நடத்துபவர்களின் ஒரே குறி.. அவர்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்காகவே பலர் தரம் தாழ்ந்த வீடியோக்களை பதிவிடுவதை சர்வசாதாரணமாக இப்போது காண முடிகிறது.
பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பதிவிட்டவர்கள் மீது காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருவதையும் பார்க்க முடிகிறது.. அப்படித்தான் இப்போதும் ஒரு யூடியூப் சேனல் சிக்கி உள்ளது.
சென்னை டாக் என்பது அந்த யூடியூப் சேனல் பெயர்.. "2020 எப்படி போனது" என்று பெசன்ட் நகர் பீச்சில் இளம்பெண்களிடம் பேட்டி எடுத்துள்ளனர்... அதில் ஒரு பெண்ணிடம் பேசியது மிகவும் ஆபாசமாக இருந்ததாக பெசன்ட் நகரை சேர்ந்த லெட்சுமி என்பவர், அந்த யூடியூப் சேனல் குழுவினர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப் சேனலின் (Chennai Talk YouTube channel) தொகுப்பாளர் 23 வயதுடைய அசென் பாட்ஷா, கேமராமேன் 24 வயதுடைய அஜய் பாபு மற்றும் சேனல் ஓனர் தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அந்த பெண்ணிடம் ஆபாசமாக இவர்கள் பேட்டி எடுத்ததுடன், அதை தவறாக எடிட் செய்து யூடியூபில் அப்லோடு செய்திருக்கிறார்கள்.. இதைதான் சம்பந்தப்பட்ட பெண் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்... அதிக வியூவர்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பலர் வெளியிட்டு வரும் வகையில், இந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மற்ற யூட்யூப் சேனல்காரர்களுக்கு ஒரு வார்னிங் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்!












Click it and Unblock the Notifications