10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே வெளியாக உள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் பிற்பகலில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தெர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது.
மொழிப் பாடத்துடன் தொடங்கிய பொதுத்தேர்வு, சமூக அறிவியல் பாடத்துடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்வு எழுதிய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். இதனிடையே மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று முதலே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன் கூட்டியே வெளியாகும் என்று தகவல் வெளியாகியது. இந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், மார்ச் ஏப்ரல் 2025ல் நடைபெற்ற 2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு (SSLC) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி காலை 9 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படப்படவுள்ளது.
10ஆம் வகுப்பு மாணவர்கள்மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in www.tnresults.nic.in என்று இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்கள், தங்களின் தேர்வு முடிவுகளை https://resultsdigilocker.gov.in www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து கொள்ள முடியும்.
தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும். தனித்தேர்வர்களுக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications