Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கத்தில் இறங்கிய தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.. மழைநீர் வடிகால் பணிகளை வேகமாக முடிக்க ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, தாம்பரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் வடிகால் பணிகளை வடகிழக்குப் பருவ மழைக்கு முன்னதாக வேகமாக முடித்திட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

TN Chief Secretary shiv das meena order to fasten drainage works

தாம்பரம் மாநகராட்சி, தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 464 படுக்கைகளைக் கொண்ட பணிபுரியும் பெண்களுக்கான தங்கும் விடுதிக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு தாம்பரம், வார்டு-48க்குட்பட்ட காளிதாசர் தெருவில் தமிழ்நாடு நகர்ப்புர சாலைகள் உட்கட்டமைப்பு திட்ட நிதியின் கீழ். ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் 1.25 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையின் தரம் மற்றும் அதன் அளவீடுகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

TN Chief Secretary shiv das meena order to fasten drainage works

வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் அருகில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடித்திடவும், மழைநீர் வடிகாலுக்கான இணைப்பினை ஏற்படுத்திடவும், உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி பணிகளை மேற்கொள்ளவும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

TN Chief Secretary shiv das meena order to fasten drainage works

தலைமைச் செயலர் மேற்கொண்ட ஆய்வின்போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆணையர் அமுதவல்லி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆனந்த்குமார் சிங், சமூக நலத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+