முதல்வர் பழனிச்சாமியை கொடைக்கானலில் கொல்ல போகிறோம்.. மர்ம நபர் மிரட்டல்.. போலீஸ் விசாரணை!
தமிழக முதல்வர் பழனிச்சாமியை கொலை செய்யப் போவதாக செல்போனில் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக முதல்வர் பழனிச்சாமியை கொலை செய்யப் போவதாக செல்போனில் மர்மநபர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் நடந்து வருவதாக தற்போது நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் இலங்கை குண்டு வெடிப்பு காரணமாகவும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகத்திலும் போலீஸ் அதிக அளவில் குவிக்கப்பட்டு ஆங்கங்கே சோதனைகள் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் பழனிச்சாமிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் பேசிய மர்ம நபர், முதல்வரை கொல்ல போவதாக கூறியுள்ளார். கொடைக்கானலில் வைத்து முதல்வரை கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த மிரட்டல் குறித்து தற்போது சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த மிரட்டல் காரணமாக தற்போது முதல்வருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications