லோக் ஆயுக்தா தேடுதல் குழு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைவராக நியமனம்!
லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லோக் ஆயுக்தா தேடுதல் குழு இனி லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தமிழக சட்டசபை கூட்டதொடரில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய தேர்வுக்குழு இதற்காக உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் இதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் லோக் ஆயுக்தா தேர்வு குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான கூட்டம் தற்போது தலைமை செயலகத்தில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சபாநாயகர் தனபால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுனர்.
இந்த குழுவின் உறுப்பினராக திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் ஏற்கனவே கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் வலுவில்லாமல் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு நியமிப்பது தொடர்பாக விவாதம் நடத்தினார்கள். மூன்று மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.
ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் தனபால் கலந்து கொண்டார். சில அதிகாரிகள், ஐஏஎஸ்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த லோக் ஆயுக்தா தேடுதல் குழுதான் இனி லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. லோக் ஆயுக்தாவின் தலைவர் யார், உறுப்பினர்கள் யார் என்று இந்த அமைப்புதான் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
18ஆவது மாநிலமாக தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். ஆளுநரின் அனுமதி பெறாமலே குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு உரிமை இருக்கிறது
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications