Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினாவில் பிரமாண்டம்..நாளை கருணாநிதி நினைவிடம் திறப்பு! நீங்கள் சுற்றிப்பார்க்க சூப்பரான வழிகாட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைக்கும் நிலையில் அதை சுற்றுப்பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

இதுகு­றித்து தமிழ்­நாடு அர­சு வெளியிட்டு உள்ள செய்­திக்குறிப்­பில், “உலகத் தமி­ழி­னத்­தின் மிக உயர்ந்த தலை­வர்­க­ளா­கத் திகழ்ந்த பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் 1969 பிப்­ர­வரி 3 ஆம் நாள் மறைந்­த­பின் அவ­ருக்­குச் சென்­னைப் பல்­க­லைக் கழ­கத்­தின் எதி­ரில் நினை­வி­டம் அமைக்­கப்­பட்­டது. அதனை மிகச் சிறந்த கட்­ட­டக்­கலை வடி­வ­மைப்­பு­டன் 1969 ஆம் ஆண்­டில் அமைத்­த­வர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்!

TN CM Karunanidhi Memorial to be inaugurated by CM Stalin tomorrow


தமிழ்­நாட்டு வர­லாற்­றில் 19 ஆண்டு காலம் முத­ல­மைச்­ச­ராக வீற்­றி­ருந்து, தமிழ் நாட்டை வளப்­ப­டுத்தி, தமிழ் மக்­க­ளின் வாழ்க்­கைத் தரத்தை உயர்த்தி; இந்­திய அர­சி­ய­லில் எழுச்­சியை ஏற்­படுத்தி, உலக வர­லாற்­றில் உன்­ன­தப் புகழ்ச் சின்­ன­மா­கத் திக­ழும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள், தமது 95ஆம் வய­தில் 2018 ஆகஸ்டு திங்­கள் 7ஆம் நாள் மறைந்து, நீதி­மன்­றத்­தின் ஆணை பெற்று பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் நினை­விடம் அரு­கி­லேயே இடம் கொண்­டார்­கள்.

பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் இரண்டு நினை­வி­டங்­க­ளும் 8.57 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் அமைந்­துள்­ளன. சென்­னைக் கடற்­கரை – காம­ரா­சர் சாலை­யில் அமைந்­துள்ள இந்த நினை­வி­டங்­க­ளின் முகப்பு வாயி­லில் பேர­றி­ஞர் அண்ணா நினை­வி­டம் – முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் நினை­வி­டம் எனும் பெயர்­கள் அழ­கு­றப் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. நுழைவு வாயி­லைக் கடந்து உள்ளே சென்­றால் எதி­ரில் அமர்ந்து படிப்­பது போன்ற தோற்­றத்­தில் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் சிலை; வல­பு­றம் இளங்­கோ­வ­டி­கள், இடப்­பு­றம் கம்­பர் சிலை­கள் அமைந்து நம்மை மகிழ்­விக்­கின்­றன.

நினை­வி­டங்­க­ளின் முன்­ப­குதி இரு­பு­றங்­களிலும் பழ­மை­யான புல் வெளி­கள் அமைந்­துள்ளன. இடப்­பு­றத்­தில் 'அண்ணா அருங்­காட்­சி­யம்’ அமைந்­துள்­ளது. பேர­றி­ஞர் அண்ணா சதுக்­கம் அமைந்­துள்ள பகு­தி­யைச் சுற்றி அமைந்த மண்­ட­பங்­கள் வெண்மை நிறத்­தில் பளிச்­சி­டு­கின்­றன. “எதை­யும் தாங்­கும் இத­யம் இங்கே உறங்­கு­கி­றது” எனப் பொறிக்­கப்­பட்­டுள்ள, பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் துயில்­கொள்­ளும் சதுக்­கத்­தைக் கடந்து சென்­றால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் அமர்ந்து எழு­தும் வடி­வி­லான சிலை­யைக் காண­லாம். சிலை­யைக் கடந்து சென்­றால் எதிரே அமைந்­துள்ள முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் நினை­வி­டம், நம் நெஞ்சை ஒருக் கணம் அமைதி கொள்­ளச் செய்­கி­றது.

நினை­வி­டத்­தில், “ஓய்­வெ­டுத்­துக் கொள்­ளா­மல் உழைத்­த­வர், இங்கே ஓய்வு கொண்­டி­ருக்­கி­றார்” எனும் தொடர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் எண்­ணப்­ப­டியே பொறிக்­கப்­பட்­டுள்­ளது. கலை­ஞர் நினை­வி­டத்­தின் முன்னே இரு­பு­ற­மும், தமிழ் செம்­மொழி என ஒன்­றிய அரசு ஏற்ற முடி­வைத் தெரி­வித்­துப் பாராட்டி, காங்­கி­ரஸ் தலை­வர் திரு­மதி சோனியா காந்தி அவர்­கள், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளுக்கு 8-11-2005 அன்று எழு­திய கடி­தம் ஆங்­கி­லத்­தி­லும், தமி­ழி­லும் புத்­தக வடி­வில் அமைக்­கப் பட்­டுள்­ளன.

'கலை­ஞர் உல­கம்’ எனும் அருங்­காட்­சி­ய­கம்!
நினை­வி­டத்­தின் பின்­பு­றம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் புன்­னகை பூத்த முகம் பொன்­னி­றத்­தில் மிளிர்­வ­து­டன் சுற்­றி­லும் மின்­வி­ளக்­கு­கள் விண்­மீன்­க­ளாக ஒளிர்­கின்­றன. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினை­வி­டத்­தின் கீழே நில­வ­றைப் பகு­தி­யில், “கலை­ஞர் உல­கம்” எனும் பெய­ரில் ஓர் அரு­மை­யான அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 'கலை­ஞர் உல­கம்’ பகு­தி­யில் இடப்­பு­றம் சென்­றால், நடை­பா­தை­யின் வலப்­பு­றத்­தில், கலை­ஞர் நிர்­மா­ணித்த திரு­வள்­ளு­வர் சிலை, குடிசை மாற்­று­வா­ரி­யம் முத­லி­யவை படங்­க­ளாக அமைக்­கப்­பட்டு விளக்­கொ­ளி­யு­டன் மிளிர்­கின்­றன.

உள்ளே வலப்­பக்­கம் திரும்­பி­னால், இடப்­பக்­கச் சுவ­ரில் தமிழ்த்­தாய் வாழ்த்து பொறிக்­கப் பட்­டுள்­ளது. அதன் கீழ்ப்­பு­றம், 'தமிழ்த்­தாய் வாழ்த்து அரசு நிகழ்ச்­சி­க­ளில் பாடப்­பட வேண்­டும்’ என முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் 23-.11.-1970 அன்று பிறப்­பித்த அர­சா­ணை­யும், 'தமிழ்த் தாய் வாழ்த்து மாநி­லப் பாடல்’ என தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 17-.12.-2021 அன்று பிறப்­பித்த அர­சா­ணை­யும், அவர்­க­ளின் படங்­க­ளு­டன் இடம் பெற்று நம்மை மகிழ்­விக்­கின்­றன.

அரு­கில், 'கலை­ஞ­ரின் எழி­லோ­வி­யங்­கள்’ எனும் அறை – அதில், கலை­ஞ­ரின் இள­மைக் காலம் முதல், அவர் வர­லாற்­றில் இடம் பெற்ற நிகழ்­வு­கள், கலை­ஞ­ரின் படைப்­பு­கள், அவர் சந்­தித்த போராட்­டங்­கள், நிறை­வேற்­றிய பல்­வேறு திட்­டங்­கள் தொடர்­பான புகைப் படங்­கள் அமைந்து நமக்கு மலைப்­பைத் தரு­கின்­றன.

அடுத்து “உரி­மைப் போராளி கலை­ஞர்” எனும் தலைப்­பைக் கொண்ட அறை­யில் நுழைந்­தால் – தேசி­யக் கொடியை மாநில முதல்­வர்­கள் ஏற்­றிட உரிமை பெற்­றுத் தந்த கலை­ஞ­ரின் வெற்­றி­யைக் குறிக்­கும் வகை­யில், 'சென்­னைக் கோட்­டை­யில் முதன் முதல் தேசி­யக் கொடியை ஏற்றி வைத்து கலை­ஞர் உரை­யாற்­றும் காட்சி’ அமைப்­பு­டன் பின்­பு­றம், தலை­மைச் செய­ல­கத்­தின் முகப்­புத் தோற்­றம் அமைந்து நம்மை வர­வேற்­கி­றது.

அடுத்து, கோபா­ல­பு­ரம் இல்­லத்­தில் கலை­ஞர் அமர்ந்­தி­ருக்­கும் தோற்­றம் அரு­கில் நின்று புகைப்­ப­டம் எடுக்­க­லாம். சில நிமி­டங்­க­ளில் புகைப்­ப­டம் நமக்­கும் கிடைக்­கும் வசதி அமைக்­கப்­பட்­டுள்­ளது. வலப்­பு­றத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் மெழு­குச் சிலை­யாக நின்று நம்மை மகிழ வைக்­கி­றார். கலை­ஞர் படைப்­பு­கள் – நெஞ்­சுக்கு நீதி, குற­ளோ­வி­யம் தென்­பாண்­டிச் சிங்­கம் முத­லான 8 நூல்­க­ளின் பெயர்­கள் காணப்­ப­டும். அவை ஒவ்­வொன்­றின் மீதும் நாம் கை வைத்­தால், அந்த நூல் பற்­றிய விளக்­கம் வீடி­யோ­வா­கத் தோன்றி நமக்கு அவற்றை எடுத்து உரைக்­கும்.

அடுத்து, “அர­சி­யல் கலை அறி­ஞர் கலை­ஞர்” எனும் அறைக்­குள் செல்­ல­லாம். எதிரே கலை­ஞ­ரின் பெரிய நிழற்­ப­டம். வலப்­பக்­கம் இருக்­கை­கள் அமைக்­கப்­பட்டு, அவற்­றின் எதி­ரில் வெள்­ளித்­திரை: அதில், ஏறத்­தாழ 20 நிமி­டங்­கள் கலை­ஞர் அவர்­க­ளின் பிறப்பு முதல் இறுதி நாள் வரை­யான முக்­கிய வர­லாற்று நிகழ்­வு­கள்; அரு­மை­யான படக் காட்­சி­க­ளாக, 'கலை­யும் அர­சி­ய­லும்’ எனும் தலைப்­பில் நம்­முன் தோன்றி நம்மை வியக்க வைக்­கும் .

அடுத்த அறை­யில், “சரித்­திர நாய­க­னின் சாத­னைப் பய­ணம்” தலைப்­பு­டை­யது. அதில் நுழைந்­தால் திரு­வா­ரூர் முதல் சென்னை வரை ரயி­லில் பய­ணிப்­பது போன்ற உணர்வை நமக்கு ஏற்­ப­டுத்­தும். நாம் அமர்ந்த நிலை­யில், தஞ்சை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ரயில் நிலை­யங்­க­ளைக் கடந்து சென்­னையை அடை­ய­லாம். அந்­தந்த ஊர்­க­ளில் கலை­ஞர் வாழ்­வோடு தொடர்­பு­டைய நிகழ்­வு­கள் காட்­சி­க­ளா­கத் தோன்­றும்.

வழி­யில் யானை­யொன்று நாம் பய­ணிக்­கும் ரயில் பாதையை மறித்து நின்று நமக்கு வணக்­கம் செலுத்தி, வாழ்த்­து­வது நம்மை மெய் சிலிர்க்க வைத்­தி­டும். அறை­க­ளுக்கு வெளியே அமைந்­துள்ள நடை­யில் இரு­பு­றங்­க­ளி­லும், பெண்­ணி­யக் காவ­லர், ஏழைப் பங்­கா­ளர், நவீன தமிழ் நாட்­டின் சிற்பி, உல­க­ளா­விய ஆளு­மை­க­ளு­டன் கலை­ஞர் முத­லான தலைப்­பு­க­ளில் அமைந்த அரிய புகைப்­ப­டங்­கள் அழ­குற அமைக்­கப்­பட்­டுள்­ளன. அப்­ப­கு­தி­யில் 5 தொலைக்­காட்­சிப் பெட்­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அவற்­றில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யில் தொடங்கி வைக்­கப்­பட்ட பல்­வேறு திட்­டங்­க­ளின் தொடக்க விழா நிகழ்ச்­சி­கள் ஒளி­ப­ரப்­பப்­ப­டு­கின்­றன.

நேர் எதிரே- முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளு­டன் தோன்­றும் அரு­மை­யான புகைப்­ப­டம் பெரிய அள­வில் அமைந்து, “மகன் தந்­தைக்கு ஆற்­றும் உதவி” எனும் குறள் தொட­ரைத் தலைப்­பா­கக் கொண்­டுள்­ளது. இப்­ப­கு­தி­யின் இறு­தி­யில் காந்­த­வி­சை­யைப் பயன்­ப­டுத்தி அமர்ந்த நிலை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அந்­த­ரத்­தில் மிதக்­கும் காட்சி, நம்மை அற்­புத உல­கிற்கு அழைத்­துச் செல்­லும். நடை பாதையை விட்டு, வெளியே வந்­தால், நேர் எதிரே கலை­ஞர் புத்­தக விற்­பனை நிலை­யம் அமைந்­துள்­ளது. அங்கே, கலை­ஞர் எழு­திய நூல்­கள் அனைத்­தும் விற்­ப­னைக்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்­றை­யெல்­லாம் கண்டு வெளியே வர முனைந்­தால் வழி­யில் வலப்­பு­றச் சுவர்­க­ளில் – தமி­ழர்­க­ளின் கலாச்­சார மையம். வள்­ளு­வர் கோட்­டம், பாம்­பன் பாலம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ­மனை முகப்­புக் கட்­ட­டம், மெட்ரோ ரயில், அண்ணா நூற்­றாண்டு நூல­கம் ஆகிய முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் படைத்த நவீ­னங்­க­ளின் தோற்­றம் வண்ண விளக்­கொ­ளி­யில் நம்மை மயங்க வைக்­கின்­றன. இவற்­றை­யெல்­லாம் பார்த்து வெளியே வர நினைத்­தால், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளு­டன் கலந்து பேசிப் பழ­கிய ஓர் புதிய அற்­புத உணர்வு நமக்கு ஏற்­ப­டும்.

வெளியே வரும்­போது – இரு­பு­றங்­க­ளி­லும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பொன்­மொ­ழி­கள் கற்­பா­றை­க­ளில் தமி­ழி­லும் ஆங்­கி­லத்­தில் பொறிக்­கப்­பட்டு நம் இத­யத்­தி­லும் பதி­யும் வண்­ணம் அரு­மை­யாக அமைக்­கப்­பட்­டுள்­ளன. மொத்­தத்­தில் புதுப்­பிக்­கப்­பட்ட அண்ணா நினை­வி­ட­மும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் புதிய நினை­வி­ட­மும் – பல ஆண்­டு­கள் வரை நம் நெஞ்­சை­விட்டு என்­றும் நீங்­கா­மல் நம்மை ஆட்­கொண்­டி­ருக்­கும் என்­பது மட்­டும் உறுதி.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், தமிழ்ச் சமு­தா­யத்­தின் தன்­னி­க­ரில்­லாப் பெரு­மை­க­ளைத் தர­ணி­யில் உயர்த்தி, நிலை­நாட்­டிய ஒப்­பி­லாத் தலை­வர்­க­ளான பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் புதுப்­பிக்­கப்­பட்ட நினை­வி­டத்­தை­யும், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் புதிய நினை­வி­டத்­தை­யும் நாளைய தினம் (26-2-2024 – திங்­கள்­கி­ழமை) மாலை 7.00 மணி அள­வில் திறந்து வைக்­கி­றார்­கள்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+