ரேஷன் பொருட்கள் தரமாக இருக்கணும்.. புகார்களே வரக்கூடாது.. அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆர்டர்!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
குடும்ப அட்டை வழங்குதல், உணவு பொருட்கள் விநியோகம், சிறப்பு பொது விநியோக திட்டம், ரேசன் கடைகளை கணிணி மயமாக்குதல் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இதேபோல் ரேஷன் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், எடைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும், ரேஷன் கடைகளை கணினிமயமாக்க வேண்டும். குடும்ப அட்டைக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு காலதாமதமின்றி அதை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
சுய உதவிக் குழுக்கள், சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளிட்டடோருக்கு கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக கடன் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications