'முதல்ல கீழே இறங்கு'.. மீனவ பெண்ணை அரசு பேருந்தில் இருந்து இறக்கி விட்ட கண்டக்டர்.. என்ன நடந்தது?
சென்னை: அரசு பேருந்தில் இருந்த மீனவப் பெண்ணை வலுக்கட்டாயமாக கீழே இறக்கிய கண்டக்டருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் மகாபலிபுரம் பேரூராட்சி கொகிலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர செல்லம்மாள்( 52) . இவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக மீன் கூடையை எடுத்துக்கொண்டு மாமல்லபுரம் பேருந்து நிலையத்துக்கு சென்றார்.
Recommended Video
அங்கு இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய பேருந்தில் (தடம் எண் 515) பேருந்தில் செல்லம்மாள் ஏறினார். அந்த பேருந்தின் கண்டக்டர் இதனை பார்த்து ஆத்திரம் அடைந்தார். ''மீன் கூடையை ஏற்றிக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது. உடனே கீழே இறங்கு'' என்று மீனவ பெண்ணிடம் கூறினார்

பேருந்தில் இருந்து இறக்கி விட்டார்
அதற்கு செல்லம்மாள் ''நான் ஏன் இறங்க வேண்டும் என்று கேட்க'' இதற்கு ''நீ யாரிடமும் போய் வேண்டுமானலும் புகார் கொடு'' என்று கூறிய கண்டக்டர் மீனவ பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டார். மீனவ பெண் செல்லம்மாள் பேருந்தில் இருந்து இறக்கி விடப்படும் காட்சிகளும், கண்டக்டர் பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நாங்கள் திருடர்களா?
பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட மீனவ பெண் மிகவும் வேதனை அடைந்தார். நாங்கள் என்ன திருடர்களா? நாங்கள் பயணச் சீட்டுக்கு பணம் செலுத்த மாட்டோமா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மாநகரப் பேருந்து ஏழைகளுக்கானது இல்லையா? வசதிபடைத்தவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள்லக்கேஜ் ஏற்றுவது இல்லையா? நாங்கள் பணம் செலுத்தத் தயாராக இருக்கும்போது நடத்துனர்கள் ஏன் எங்களை கீழ்தரமாக பார்க்கின்றனர்?

பலரும் கண்டனம்
மாநகர பேருந்தில் மீன் கூடைகளை ஏற்றக் கூடாது என்று அரசு விதி ஏதும் உள்ளதா? என்றும் மீனவ பெண் செல்லம்மாள் தனது மனக்குமுறலை கொட்டினார். ''இது என்ன கொடுமை? என்று நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர் சம்பவங்கள்
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோர் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது துறை ரீதியான ஒழுங்கீன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு பேருந்துகளில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் அரசு பேருந்து டிரைவர் மற்றும் கண்டர்களுக்கு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் கூறியிள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications