Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார வாரியம்.. உச்சத்தில் மின்கட்டணம்.. அமைச்சர்கள் சொன்னது போல செய்யல.. கோட்டைக்கு போன கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு கோரிக்கையும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

10 வருடங்கள் கழித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த வருடம் செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது.. இதையடுத்து, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இதனையும் தமிழக அரசு அமல்படுத்தியது.

TN Electricity board and fasting today in Chennai emphasizing on 5 point demands reduction of status fee

கட்டண உயர்வு: அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் அமலுக்கு வந்துள்ளது. இது வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருத்த அதிருப்திக்கு ஆளானார்கள்..

விசைத்தறி தொழிலாளர்கள்: இவர்களின் கோரிக்கையை ஏற்று, மின்கட்டணம் குறைக்கப்பட்டது என்றாலும், விசைத்தறி மின் கட்டணத்தை கடந்த 1.9.2022. முதல் 31.3.2023 வரையிலான விடுபட்ட காலத்திற்கும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுக்கள் தரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், மின்கட்டணத்தை குறைக்கக்கோரி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சார்பில் சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகின்றன.. தமிழகம் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் 430 சதவீதமாக உயர்த்தப்பட்டதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன..

5 கோரிக்கைகள்: அத்துடன், உயர்த்தப்பட்ட 25 சதவீத பீக் ஹவர் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும், சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை குறைக்க வேண்டும், 12 கி.வாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்குப் பதிலாக 3-ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.

இதை வலியுறுத்தி, கடந்த மாதம் 25-ம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்ட நிலையில், ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருந்தது. எனவேதான், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண முறைகளை மாற்றி அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

போராட்டம்: இதற்கு பிறகு, அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.. ஆனால், இதுவரை கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றவில்லையாம்.. எனவேதான், இன்றையதினம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்கும் இந்த உண்ணவிரத போராட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்பதாக தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+