பரபர வேகத்தில் ரெடியாகும் தமிழக அரசு.. 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்க உத்தரவு
சென்னை: 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்க தமிழக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அது போல் முகக் கவசம், பிபிஇ கிட்களையும் போதுமான அளவிற்கு இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் 6 மாதங்களுக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை வாங்கி இருுப்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
கொரோனா வார்டுகளில் படுக்கைகளை அதிகரிக்கவும் வேண்டும். கொரோனா தடுப்பூசி மையங்கள் முழுநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். மருத்துவமனை வளாகங்களில் அனைவரும் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் ஆகிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சீனா, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஎப் 7 எனும் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

பிஎப் 7
இந்தியாவிலும் சிலருக்கு புதிய வேரியண்ட் பிஎப் 7 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பொது இடங்களில் முகக் கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம்
இந்திய அளவிலும் விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்படுகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் புதிய வேரியண்ட்டால் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
-
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர்












Click it and Unblock the Notifications