இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக்கூடாது.. பட்டாசு வெடிக்கக்கூடாது.. தமிழக அரசு கட்டுப்பாடு!
சென்னை: குடியிருப்பு பகுதிகள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் இரவு நேரத்தில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும், ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அமைதி மண்டலங்களில் இரவு நேரங்களில் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒலி மாசு, நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications