Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த அளவுக்கும் எல்லை மீறுவார்கள்... மறைமுகத்தேர்தலில் ஒத்துழைப்பு தேவை - ஸ்டாலின் கடிதம்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும். வெற்றி பெற்றவர்கள் இன்னும் சில நாட்களில் வார்டு கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொள்வார்கள்.

மார்ச் 4ஆம் தேதி மறைமுகத்தேர்தல் நடைபெற உள்ளது. மேயர், துணை மேயர், நகராட்சித்தலைவர், நகராட்சித்துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத்தலைவரை வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்வார்கள். எனவே தேர்தலில் தலைமை அறிவிக்கும் நபர்களுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், நமக்கு வெற்றி உறுதி. இதனால் நமக்கு கடமையும், பொறுப்பும் மிகுதியாகியுள்ளது. இருப்பினும் வெற்றிக் கொண்டாட்டங்களைத் குறைத்துக் கொண்டு, மக்கள் பணிகளை கூடுதலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

கண்ணும் கருத்துமாக

கண்ணும் கருத்துமாக

பத்தாண்டுகளாகப் பாழாக்கப்பட்ட உள்ளாட்சி ஜனநாயகத்தின் வேர்களுக்கு நீர் வார்த்து தேர்தலை நடத்தி முடித்திருக்கிறோம். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிமுக எந்த அளவுக்கும் எல்லை மீறிச் செல்வார்கள்; கழகத்தின் முகவர்கள் கண்ணும் கருத்துமாகச் செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் அவதூறுகளையும் பொய்களையும் சாதனைகளால் எதிர்கொண்டோம்!

மறைமுகத் தேர்தல்

மறைமுகத் தேர்தல்

நமது வெற்றியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். நாம் அமைதிகாத்து, சட்டப்படி எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டுள்ளார். மறைமுகத்தேர்தலில் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்படுவோருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

வெற்றி பெறச்செய்யுங்கள்

வெற்றி பெறச்செய்யுங்கள்

தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் பதவிகளுக்கும் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நாட்டின் கடைக்கோடி மனிதரும், ஜனநாயகத்தின் நிழலில் இளைப்பாற வேண்டும் என்பதே முதலமைச்சரான எனது எண்ணம். மக்களின் நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் மிகுந்துள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+