சரியான பாயிண்ட்டை பிடித்த ஆளூர் ஷா நவாஸ்! சூடு பிடிக்கும் இவிஎம் சர்ச்சை!
சென்னை: நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு உரிமை இல்லையா என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதனை விசாரித்து வரும் நீதிமன்றம் தேர்தல் முடிவதற்குள் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை நேற்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் இந்த விசாரணையின் போது நீதிபதி, 'நீதிமன்றத்தைப் போன்று தன்னாட்சி பெற்ற அமைப்புதான் தேர்தல் ஆணையம். அதன் சுதந்திரத்திற்குள் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும்?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பேச்சு இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
ஒரு பக்கம் தேர்தல் ஆணையமே நடுநிலை தவறி வருவதாக 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இப்போது நீதிபதி வேறு ஒரு கோணத்திற்கு வழக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

ஆக, இரண்டுமே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். "நான் யாருக்கு ஓட்டுப் போடுகிறேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. அதுதான் ஜனநாயகம்.
ஆனால், நான் போட்ட ஓட்டு அந்தச் சின்னத்திற்குத்தான் விழுந்துள்ளது என்பது எனக்குத் தெரியவேண்டும். அதற்குப் பெயர் வெளிப்படைத்தன்மை. அது இருக்க வேண்டுமா வேண்டாமா? இதைத்தான் எங்கள் தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.
முன்பு சட்டம் எப்படி இருந்தது? உச்சநீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கித்தான் தேர்தல் ஆணையர் தேர்வு இருக்க வேண்டும் என்று இருந்த சட்டத்தைத் திருத்தியது யார்? இந்தப் பாஜக அரசுதான்.
உச்சநீதிமன்ற நீதிபதியைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு, மோடியே தேர்தல் ஆணையரை நியமிப்பார், மோடி அமைச்சரே தேர்தல் ஆணையரை நியமிப்பார் என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு பாஜக வேறு, தேர்தல் ஆணையம் என்பது வேறு யாராவது சொன்னால் எப்படி நம்புவது சொல்லுங்கள்?

ஒரு தேர்தல் ஆணையர் திடீரென்று உள்ளே வருகிறார். ஒருவர் திடீரென்று வெளியே போகிறார். இந்த இரண்டுக்குமே காரணம் கிடையாது. அதன்பிறகு பாஜக அரசு நியமித்த தேர்தல் ஆணையர்கள் இருவருமே பாஜகவின் நட்பு வட்டத்திலிருந்தவர்கள். அவர்களுக்காக நேரடியாகச் செயலாற்றியவர்கள்.
பாஜக அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டம் வைத்திருந்ததோ அதை எல்லாம் செய்து முடிப்பதற்காக வேலை பார்த்துவந்த ஊழியர்கள். ஆக, இந்தத் தேர்தல் ஆணையர்கள் தேர்வு என்பதே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.

ஆக, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் போதே பாஜக எப்படிச் செயல்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பது மிகத் தெளிவாக விளங்கிவிட்டது.
இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது? தேர்தல் ஆணையம் என்பது நீதிமன்றத்தைப் போலத் தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? எனக் கேட்டுள்ளது. இப்படி ஒரு நீதிபதி கருத்துச் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
அப்படி என்றால் சண்டிகர் மேயர் தேர்தலை நடத்தியது யார்? தேர்தல் ஆணையம். அங்குத் தேர்தல் அதிகாரி எப்படிச் செயல்பட்டார்? வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்காமல், வாக்குகளைச் செல்லாதவை என மாற்றிக் கூறி பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

கையும் களவுமாக அந்தத் தேர்தல் அதிகாரி எதிர்த்து நீதிமன்றத்திற்குத்தான் சென்றார்கள். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நாங்கள் தலையிட முடியாது என்று இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னதைப் போலச் சொல்லவில்லையே?
அன்று நீதிமன்றம் தலையிட்டதால்தான் சண்டிகர் தேர்தலில் நீதி காப்பாற்றப்பட்டது. அப்படி என்றால் அதே வாதம் ஏன் இந்தப் பொதுத் தேர்தலுக்குப் பொருந்தவில்லை? அதுதான் மிகப்பெரிய கேள்வி" என்கிறார்
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications