சரியான பாயிண்ட்டை பிடித்த ஆளூர் ஷா நவாஸ்! சூடு பிடிக்கும் இவிஎம் சர்ச்சை!
சென்னை: நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு உரிமை இல்லையா என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அதனை விசாரித்து வரும் நீதிமன்றம் தேர்தல் முடிவதற்குள் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை நேற்று உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் இந்த விசாரணையின் போது நீதிபதி, 'நீதிமன்றத்தைப் போன்று தன்னாட்சி பெற்ற அமைப்புதான் தேர்தல் ஆணையம். அதன் சுதந்திரத்திற்குள் நீதிமன்றம் எப்படித் தலையிட முடியும்?' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்தப் பேச்சு இப்போது விவாதப் பொருளாகியுள்ளது.
ஒரு பக்கம் தேர்தல் ஆணையமே நடுநிலை தவறி வருவதாக 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இப்போது நீதிபதி வேறு ஒரு கோணத்திற்கு வழக்கைச் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

ஆக, இரண்டுமே பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் சில கேள்விகளை முன்வைத்துள்ளார். "நான் யாருக்கு ஓட்டுப் போடுகிறேன் என்பது மற்றவர்களுக்குத் தெரியக் கூடாது. அதுதான் ஜனநாயகம்.
ஆனால், நான் போட்ட ஓட்டு அந்தச் சின்னத்திற்குத்தான் விழுந்துள்ளது என்பது எனக்குத் தெரியவேண்டும். அதற்குப் பெயர் வெளிப்படைத்தன்மை. அது இருக்க வேண்டுமா வேண்டாமா? இதைத்தான் எங்கள் தலைவர் திருமாவளவன் கேட்டுள்ளார்.
முன்பு சட்டம் எப்படி இருந்தது? உச்சநீதிமன்ற நீதிபதியை உள்ளடக்கித்தான் தேர்தல் ஆணையர் தேர்வு இருக்க வேண்டும் என்று இருந்த சட்டத்தைத் திருத்தியது யார்? இந்தப் பாஜக அரசுதான்.
உச்சநீதிமன்ற நீதிபதியைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு, மோடியே தேர்தல் ஆணையரை நியமிப்பார், மோடி அமைச்சரே தேர்தல் ஆணையரை நியமிப்பார் என ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு பாஜக வேறு, தேர்தல் ஆணையம் என்பது வேறு யாராவது சொன்னால் எப்படி நம்புவது சொல்லுங்கள்?

ஒரு தேர்தல் ஆணையர் திடீரென்று உள்ளே வருகிறார். ஒருவர் திடீரென்று வெளியே போகிறார். இந்த இரண்டுக்குமே காரணம் கிடையாது. அதன்பிறகு பாஜக அரசு நியமித்த தேர்தல் ஆணையர்கள் இருவருமே பாஜகவின் நட்பு வட்டத்திலிருந்தவர்கள். அவர்களுக்காக நேரடியாகச் செயலாற்றியவர்கள்.
பாஜக அரசு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டம் வைத்திருந்ததோ அதை எல்லாம் செய்து முடிப்பதற்காக வேலை பார்த்துவந்த ஊழியர்கள். ஆக, இந்தத் தேர்தல் ஆணையர்கள் தேர்வு என்பதே ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.

ஆக, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் போதே பாஜக எப்படிச் செயல்பட்டது? அதன் நோக்கம் என்ன என்பது மிகத் தெளிவாக விளங்கிவிட்டது.
இப்போது உச்சநீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது? தேர்தல் ஆணையம் என்பது நீதிமன்றத்தைப் போலத் தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் எப்படி நீதிமன்றம் தலையிட முடியும்? எனக் கேட்டுள்ளது. இப்படி ஒரு நீதிபதி கருத்துச் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
அப்படி என்றால் சண்டிகர் மேயர் தேர்தலை நடத்தியது யார்? தேர்தல் ஆணையம். அங்குத் தேர்தல் அதிகாரி எப்படிச் செயல்பட்டார்? வெற்றி பெற்ற இந்தியா கூட்டணி வேட்பாளரை அறிவிக்காமல், வாக்குகளைச் செல்லாதவை என மாற்றிக் கூறி பாஜக வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

கையும் களவுமாக அந்தத் தேர்தல் அதிகாரி எதிர்த்து நீதிமன்றத்திற்குத்தான் சென்றார்கள். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதில் நாங்கள் தலையிட முடியாது என்று இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சொன்னதைப் போலச் சொல்லவில்லையே?
அன்று நீதிமன்றம் தலையிட்டதால்தான் சண்டிகர் தேர்தலில் நீதி காப்பாற்றப்பட்டது. அப்படி என்றால் அதே வாதம் ஏன் இந்தப் பொதுத் தேர்தலுக்குப் பொருந்தவில்லை? அதுதான் மிகப்பெரிய கேள்வி" என்கிறார்
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications