“சபாநாயகர் அப்பாவு எங்களை கிண்டல் செய்கிறார்".. சட்டப்பேரவையில் எடப்பாடி பரபர குற்றச்சாட்டு!
சென்னை: "நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து சிரிக்கிறார். 'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்" எனக் குற்றம் சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆவேசமாக பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை சட்டப்பேரவை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் அதுகுறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது.

முன்னதாக இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுகவினர் பலர் கலந்துகொண்ட நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. செங்கோட்டையனின் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் அவருடன் அதிமுக நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.
பின்னர், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செங்கோட்டையன் ஆதரவு தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பாஜகவினர் வாக்கெடுப்பை புறக்கணித்தனர். பாமகவினரும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "மக்கள் பிரச்சனைகளை சட்டப்பேரவையில் பேசும்போது சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்து கொள்கிறார். சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அனைவருக்கும் பொதுவானவர்கள்; கேள்வி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவராக நான் பேசும்போது நேரலை செய்வதில்லை.
பேரவைத் தலைவர் பெரும்பாலான நேரங்களில் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்; தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார். சபாநாயகரின் செயல்பாடு விதிகளுக்கு முரணாக உள்ளது. அதிமுக உறுப்பினர்கள் பேசினால், பேரவைத்தலைவர் அவசரப்படுத்துகிறார்.
எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது அப்பாவு அவசரப்படுவது ஏன்?. யாருடைய கட்டளையின்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசும்போது சபாநாயகர் இடையூறு செய்கிறார்?. ஆளுங்கட்சியின் தோல்விகளை மறைப்பதற்காக சபாநாயகர் என்பவர் பயன்படுத்தப்பட்டு வருகிறார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை ஆண்டுக்கு 100 நாட்கள் நடத்துவோம் எனக்கூறிய திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?. கடந்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவை 400 நாட்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 116 நாட்கள் மட்டும் நடத்தியது ஏன்?.
கருப்பு சட்டை அணிந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமர்ந்திருந்ததை ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்தார். பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை பேசவிடாமல் இருட்டடிப்பு செய்கிறார் சபாநாயகர் அப்பாவு. நாங்கள் வெளிநடப்பு செய்தால், சபாநாயகர் அப்பாவு எங்களைப் பார்த்து நகைக்கிறார். 'போங்க போங்க' என கிண்டல் செய்கிறார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். பின்னர் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சட்டப்பேரவையில் அதிமுகவுக்கு போதிய பலம் இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. இரண்டாம் முறையாகவும் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications