வெல்லும் தமிழ்ப் பெண்கள்.. மொத்தமாக மேடையேற்றப்பட்ட பெண் அதிகாரிகள்.. அமுதா ஐஏஎஸ் சொன்ன வார்த்தை
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் நிகழ்ச்சி, வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற பெயரில் நடத்தப்பட்டது பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாமானிய பெண்கள் தொடங்கி தமிழ்நாடு அரசின் உயர் பொறுப்புகளில் உள்ள பெண் அதிகாரிகள் வரை மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்டனர். இதில் நெகிழ்ந்த அமுதா ஐஏஎஸ், பெண்கள் கிட்சனில் இருந்தார்கள், கலைத்துறையில் இருந்தார்கள். இன்று கலெக்டராகவும், காக்கி சீருடை அணிந்து காவல்துறையில் உயரதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்கிற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெண்கள், அதிகாரிகள், அமைச்சர், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். எளிய பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்த பெண்களின் வெற்றி கதைகள் குறித்து பகிரப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பெண் உயரதிகாரிகள் கௌரவிப்பு
மகளிருக்காக தமிழ்நாடு அரசு செய்து வரும் திட்டங்கள் குறித்து ஸ்டாலினும், உதயநிதியும் பேசினார்கள். அதேபோல நடிகர்கள் சத்யராஜ், தேவயானி உள்ளிட்டோர் தமிழ் மண்ணின் மகத்துவம், இங்கு பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், திராவிட சித்தாந்தம் உள்ளிட்டவற்றை பேசினார்கள். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக தமிழ்நாட்டின் பெண் உயரதிகாரிகள் மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்டனர். இதில் பெண் அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் ஊடக செயலாளர் அமுதா ஐஏஎஸ், "இந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பெண் அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக எங்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக அதிகாரிகள் அனைவரும் உறுதுணையாக இருந்துள்ளனர். அதேபோல எங்கள் முன்னால் அமர்ந்துள்ள எண்ணற்ற பெண் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளனர்.
கிட்சன் டு கலெக்டர்
அவர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் கிட்சனில் இருந்தார்கள், கலைத்துறையில் இருந்தார்கள். இன்று கலெக்டராகவும், காக்கி சீருடை அணிந்து காவல்துறையில் உயரதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். கராத்தே, கபடி என்று விளையாட்டுத்துறையிலும் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஊக்கமும், ஆக்கமும் அளித்த அனைத்துத் தலைவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் களத்திற்கு செல்லும்போது மக்கள் சொல்லும் பிரச்சனைகளை காது கொடுத்து கவனமாக கேட்பார்கள். அவர்களின் தேவைக்கேற்ப தான் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் தான் பெண்களுக்காக அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன." என்றார்.. பெண் அதிகாரிகள் மேடை ஏற்றி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications