தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்.. சென்னை ஆவடியில் ரயில் சேவை பாதிப்பு
சென்னை: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. சென்னை ஆவடியில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். அந்த வகையில், கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி, பிரதமர் மோடியின் பெயர் குறித்து பேசினார்.

இந்தியாவில் நிதி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை விமர்சித்து பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்ட ஒரு வார்த்தை சர்ச்சையை கிளப்பியது. ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டதாக தீர்ப்பளித்த நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். இதனிடையே, சூரத் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில், ராகுல் எம்பி பதவி, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8-ன் படி பறிக்கப்பட்டது.
ராகுல் காந்தி மீது அரசியல் பழிவாங்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது.
ஆரணி அருகே களம்பூர் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்க்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் தலைமையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஆவடியில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை - திருவள்ளூர், திருவள்ளூர்- சென்னை மார்க்கத்தில் சுமார் அரை மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை.. அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
பில் கேட்ஸ் செய்த சதி? தமிழகத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழைக்கு இதுதான் காரணமா! வெதர்மேன் பரபர விளக்கம் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
"ஜெயிக்க வேண்டிய தேர்தல் இது.." கடும் கோபத்தில் ராகுல்! நள்ளிரவை தாண்டி.. என்ன நடந்தது












Click it and Unblock the Notifications