மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. ஒருநாள் தான் இருக்கு... அவகாசம் நீட்டிக்கப்படுமா?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
சென்னை:மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. அதனால், இன்னும் இணைக்காதவர்கள் கண்டிப்பாக இணைத்து விட வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மின் துறை அமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் மின் ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக இதுதான் இறுதிக்கெடு இதன்பிற்கு ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிபாக இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தல் விடுத்தது. இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

துவக்கத்தில் மக்கள் தயக்கம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது. ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு அச்சம் மின் நுகர்வோர்கள் மத்தியில் நிலவியதால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு துவக்கத்தில் தயக்கம் காட்டினர். இருந்தாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.

கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்திய மின்சார வாரியம் அதற்காக தமிழகம் முழுவதும் மின்சார வாரியங்களில் ஸ்பெஷல் முகாம்களையும் அமைத்தது. மின்சார வாரியத்தின் வெப்சைட் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது. டிசம்பர் 31 ஆம் தேதி காலக்கெடு முடிந்தாலும் லட்சக்கணக்கானவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதனால், ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது.

பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள்
ஒரு மாத கால அவகாசத்திற்கு பிறகும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதையடுத்து, மீண்டும் 15 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து மின்சார வாரியம் அறிவித்தது. அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

வீடுகளுக்கே செல்லும் மின் ஊழியர்கள்
மின்சார வாரியம் அறிவித்த இந்த கூடுதல் அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மின்நுகர்வோர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் விவரங்களை பெற்று இணைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications