மின் இணைப்புடன் ஆதாரை இணைச்சிட்டீங்களா?.. ஒருநாள் தான் இருக்கு... அவகாசம் நீட்டிக்கப்படுமா?
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
சென்னை:மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிகிறது. அதனால், இன்னும் இணைக்காதவர்கள் கண்டிப்பாக இணைத்து விட வேண்டும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். அதன் பிறகு கால அவகாசம் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து மின் துறை அமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் மின் ஊழியர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. முன்னதாக இதுதான் இறுதிக்கெடு இதன்பிற்கு ஆதார் எண் இணைப்புக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தது கவனிக்கத்தக்கது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.
மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கண்டிபாக இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தல் விடுத்தது. இதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது.

துவக்கத்தில் மக்கள் தயக்கம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்றது. ஆதார் எண் இணைத்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற ஒரு அச்சம் மின் நுகர்வோர்கள் மத்தியில் நிலவியதால் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு துவக்கத்தில் தயக்கம் காட்டினர். இருந்தாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவச மின்சாரத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று மின்சார வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது.

கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளையும் துரிதப்படுத்திய மின்சார வாரியம் அதற்காக தமிழகம் முழுவதும் மின்சார வாரியங்களில் ஸ்பெஷல் முகாம்களையும் அமைத்தது. மின்சார வாரியத்தின் வெப்சைட் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதியை மின்சார வாரியம் செய்து கொடுத்து இருந்தது. டிசம்பர் 31 ஆம் தேதி காலக்கெடு முடிந்தாலும் லட்சக்கணக்கானவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை. இதனால், ஜனவரி 31 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கப்பட்டது.

பிப்ரவரி 15-ம் தேதி கடைசி நாள்
ஒரு மாத கால அவகாசத்திற்கு பிறகும் சுமார் 40 லட்சம் மின் நுகர்வோர்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தனர். இதையடுத்து, மீண்டும் 15 நாட்கள் அவகாசத்தை நீட்டித்து மின்சார வாரியம் அறிவித்தது. அதாவது பிப்ரவரி 15 ஆம் தேதி வரை மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

வீடுகளுக்கே செல்லும் மின் ஊழியர்கள்
மின்சார வாரியம் அறிவித்த இந்த கூடுதல் அவகாசம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மின்நுகர்வோர்களின் பட்டியலை தயார் செய்து அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் விவரங்களை பெற்று இணைக்கும் பணியில் மின்சார ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications