எம்பிக்கள் நிதியை 2 வருடம் ரத்து செய்ய அரசு முடிவு.. கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு
சென்னை: எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வதற்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் காணொளிக் காட்சி மூலம் இன்று நடந்தது. இதில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பலர் கணொளி வாயிலாக கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் இதற்காக அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் மாநில அரசுகளுடன் இணைந்து கொரோனாவை ஒழிப்பது பற்றியும் பிரதமர் மோடி விவாதித்தார். இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அந்த முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில். கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அதிகமான அளவு நிதி தேவைப்படுகிறது. எனவே சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தேவையாகும். 2020- 21, 2021 -22 இரண்டு ஆண்களுக்கு எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கான இந்த நிதி 7900 கோடி ரூபாயாகும். இதனை சுகாதார பணிகள், கரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், அரசாங்கம் நிதிகளைப் பெற விரும்பினால் பல வழிகள் உள்ளன, ஆனால் எம்.பி.க்களுக்கான தொகுதி வளர்ச்சி நிதியை அகற்றுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தொகுதி எம்.பி.க்களை பணிநீக்கம் செய்வதற்கும், திருட்டுத்தனமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்குமான இது ஒரு மோசமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications