கிடுகிடுவென எகிறி வரும் தக்காளி விலை.. இன்னும் உயருமாம்.. காரணம் சொன்ன கோயம்பேடு காய்கறி வியாபாரி!
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மொத்த விற்பனையில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.20க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.50க்கு விற்பனை ஆகிறது. கோயம்பேட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன. இங்கிருந்து சில்லறை வியாபாரிகள் வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி அங்காடிகளுக்குத் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய உள்ளூர் மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலிருந்தும் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த மாதம் வரை தக்காளியின் வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் விலை சரிந்து ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரம் வரை தக்காளி ஒரு கிலோ ரூ.20 என்ற அளவில் விற்பனை ஆனது.
தற்போது பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தக்காளியின் வரத்து சரிந்து விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளியின் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் பேசுகையில், "தக்காளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்ற வாரத்துடன் ஒப்பிடும்போது தக்காளி விலை கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரை விலை கூடியுள்ளது. கர்நாடகா, ஆந்திராவில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வரத்து குறைவாக இருப்பதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் விலை அதிகரித்துள்ளது.
சென்ற வாரம் 20 ரூபாய் விற்றுக் கொண்டிருந்த தக்காளி மொத்த விற்பனையில் ரூ. 50, சில்லறை விற்பனையில் ரூ.60க்கு விற்பனை ஆகிறது. தக்காளி கொள்முதல் செய்யும் இடத்தில் அழுகல் அதிகமாக உள்ளது. அதனால் விலை அதிகமாக உள்ளது.
தக்காளி விலை உயர்வு இன்னும் 10 - 20 நாட்களுக்கு நீடிக்கும். தக்காளி விளைச்சல் குறைவால் வரத்து இப்போது அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆடி மாதத்தில் தான் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைய வாய்ப்பு உள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications